சென்னை: ஐ.டி., பெண் பணியாளர் கொல்லப்பட்ட வழக்கில்,
முக்கிய குற்றவாளி கோல்கட்டாவில் சிக்கினான். சி.பி.சி.ஐ.டி., போலீசார்
அவனை, நேற்று இரவு விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு
வந்தனர்.சேலம் ஆத்தூரைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவரது மகள் உமா மகேஸ்வரி, 23. சிறுசேரி, "சிப்காட்' வளாகத்தில் உள்ள டி.சி.எஸ்., நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த, ??ம் தேதி இரவு மர்ம நபர்கள், முட்புதருக்குள் தூக்கிச் சென்று அவரை பாலியல் சித்ரவதை செய்து கொன்றனர்.
வழக்கை விசாரித்த, சி.பி.சி.ஐ.டி., போலீசார், மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தைச் சேர்ந்த
உத்தம் மண்டல், 24, ராம் மண்டல், 21, ஆகியோரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.
இந்த கொலை வழக்கில், முக்கிய குற்றவாளியான உஜ்ஜல் மண்டல் என்பவனை, சி.பி.சி.ஐ.டி., போலீசார், நேற்று கோல்கட்டாவில் கைது செய்தனர்.
கொடூர தாக்குதல் : இந்த கைது நடவடிக்கை குறித்து போலீசார் கூறியதாவது: ஐ.டி., பெண் பணியாளர் உமா மகேஸ்வரி, கடந்த 13ம் தேதி, இரவு 10:30 மணிக்கு பணி முடித்து, பிரதான சாலையில் பேருந்து பிடிக்க நடந்து சென்றபோது, ஏற்கனவே அவரால் செருப்பால் அடிக்கப்பட்ட, உஜ்ஜல் மண்டல், அவரது உறவினர் உத்தம் மண்டல், ராம் மண்டல் ஆகியோர் மதுபோதையில் எதிரே வந்தனர். முன்விரோதத்தால் ஆத்திரத்தில் இருந்த, உஜ்ஜல் மண்டல், உமா மகேஸ்வரியின் வாயை பொத்த, உத்தம் மண்டல், அவரை குண்டுக்கட்டாக, அருகில் உள்ள முட்புதருக்குள் தூக்கிச் சென்றார். அதற்கு ராம் மண்டல் உதவி செய்தார். உஜ்ஜல் மண்டல், கொடூரமான முறையில், உமா மகேஸ்வரியை பாலியல் சித்ரவதை செய்தார். மற்றவர்களும் அவரது
கற்பை சூறையாட முயன்றனர். உஜ்ஜல் மண்டலின் கையை, உமா மகேஸ்வரி கடித்ததால், ஆத்திரமடைந்த அவரும், உத்தம் மண்டலும், அவரது கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் கத்தியால் குத்தி கொன்றனர்.
தப்பி ஓட்டம் : அதையடுத்து, சென்னையில் இருந்து தப்பிச் செல்ல குற்றவாளிகளுக்கு பணம் தேவைப்பட்டதால், உமா மகேஸ்வரியின் கிரெடிட் கார்டு அட்டை மூலம் பணம் எடுக்க முயன்றனர். அது தோல்வியில் முடிந்ததால், சிறுசேரி, கல்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நண்பர் அறைகளில் பதுங்கினர்.
கொலை நடந்து ஒன்பது நாட்கள் ஆன போதிலும், போலீசார் கண்டுகொள்ளாததால், அங்கேயே இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த, 22ம் தேதி போலீசார் தேடுதல் வேட்டையை துவக்கியதாக தகவல் அறிந்ததும், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் உஜ்ஜல், கோல்கட்டாவிற்கு தப்பி சென்றான். பயண அட்டவணையின்படி, அந்த ரயில் நேற்று அதிகாலை கோல்கட்டா ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும். இந்த தகவலை, குற்றவாளிகளுடன் வேலை செய்து வந்த வாலிபர் ஒருவர் போலீசாரிடம் தெரிவித்தார்.
அந்த வாலிபரை அழைத்துக் கொண்டு விமானம் மூலம் நேற்று முன்தினம் கோல்கட்டாவிற்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் விரைந்தனர். அந்த மாநில போலீசார் உதவியுடன், கரக்பூர் ரயில் நிலைய சந்திப்பில் ரயிலை நிறுத்தி, உஜ்ஜல் மண்டலை கைது செய்தனர்.பின் நேற்று காலை, கோல்கட்டா கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு, நேற்று இரவு விமானம் மூலம் அங்கிருந்து அவர்களை சென்னைக்கு கொண்டு வந்தனர்.இவ்வாறு போலீசார்
தெரிவித்தனர்.
கத்தி, தோடுகள் பறிமுதல் : கைது செய்யப்பட்டுள்ள, உஜ்ஜல் மண்டலிடமிருந்து, உமா மகேஸ்வரியை கொலை செய்ய பயன்படுத்திய கத்தி மற்றும் அவர் காதுகளில் அணிந்திருந்த தோடுகளை போலீசார்
கைப்பற்றினர்.சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் உஜ்ஜல் மண்டல் கைது செய்யப்பட்டதை மட்டும், அதிகார பூர்வமாக அறிவித்துள்ளனர்.இருவரையும் இன்று, செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி விசாரணை காவலில் எடுக்க உள்ளனர்.இந்த கொலை வழக்கில், இந்திரஜித் மண்டல் என்பவன், ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவனை கைது செய்துள்ள போதிலும், கொலை நடந்த இடத்தில் காவலுக்கு இருந்ததாக அவன் தெரிவித்ததால், அவனை முக்கிய சாட்சியாக மாற்றுவது குறித்து, சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகின்றனர்.
ஏழு நாள் போலீஸ் காவல் : உமா மகேஸ்வரி கொலை வழக்கில் கைதான, மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த உத்தம் மண்டல், 24, ராம் மண்டல், 21, இருவரையும் போலீசார் நேற்று செங்கல்பட்டு முதலாவது
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை, மார்ச் 12ம் தேதிவரை, நீதிமன்ற காவலில் வைக்க, நீதிபதி அங்காள ஈஸ்வரி உத்தரவிட்டார். இந்த நிலையில், அவர்களை, சி.பி.சி.ஐ.டி., போலீசார், 10 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, டி.எஸ்.பி., வீரமணி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரணை செய்த நீதிபதி,
அவர்களை, ஏழு நாள் சி.பி.சி.ஐ.டி., போலீஸ் காவலில் விசாரணை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
வந்தனர்.சேலம் ஆத்தூரைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவரது மகள் உமா மகேஸ்வரி, 23. சிறுசேரி, "சிப்காட்' வளாகத்தில் உள்ள டி.சி.எஸ்., நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த, ??ம் தேதி இரவு மர்ம நபர்கள், முட்புதருக்குள் தூக்கிச் சென்று அவரை பாலியல் சித்ரவதை செய்து கொன்றனர்.
வழக்கை விசாரித்த, சி.பி.சி.ஐ.டி., போலீசார், மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தைச் சேர்ந்த
உத்தம் மண்டல், 24, ராம் மண்டல், 21, ஆகியோரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.
இந்த கொலை வழக்கில், முக்கிய குற்றவாளியான உஜ்ஜல் மண்டல் என்பவனை, சி.பி.சி.ஐ.டி., போலீசார், நேற்று கோல்கட்டாவில் கைது செய்தனர்.
கொடூர தாக்குதல் : இந்த கைது நடவடிக்கை குறித்து போலீசார் கூறியதாவது: ஐ.டி., பெண் பணியாளர் உமா மகேஸ்வரி, கடந்த 13ம் தேதி, இரவு 10:30 மணிக்கு பணி முடித்து, பிரதான சாலையில் பேருந்து பிடிக்க நடந்து சென்றபோது, ஏற்கனவே அவரால் செருப்பால் அடிக்கப்பட்ட, உஜ்ஜல் மண்டல், அவரது உறவினர் உத்தம் மண்டல், ராம் மண்டல் ஆகியோர் மதுபோதையில் எதிரே வந்தனர். முன்விரோதத்தால் ஆத்திரத்தில் இருந்த, உஜ்ஜல் மண்டல், உமா மகேஸ்வரியின் வாயை பொத்த, உத்தம் மண்டல், அவரை குண்டுக்கட்டாக, அருகில் உள்ள முட்புதருக்குள் தூக்கிச் சென்றார். அதற்கு ராம் மண்டல் உதவி செய்தார். உஜ்ஜல் மண்டல், கொடூரமான முறையில், உமா மகேஸ்வரியை பாலியல் சித்ரவதை செய்தார். மற்றவர்களும் அவரது
கற்பை சூறையாட முயன்றனர். உஜ்ஜல் மண்டலின் கையை, உமா மகேஸ்வரி கடித்ததால், ஆத்திரமடைந்த அவரும், உத்தம் மண்டலும், அவரது கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் கத்தியால் குத்தி கொன்றனர்.
தப்பி ஓட்டம் : அதையடுத்து, சென்னையில் இருந்து தப்பிச் செல்ல குற்றவாளிகளுக்கு பணம் தேவைப்பட்டதால், உமா மகேஸ்வரியின் கிரெடிட் கார்டு அட்டை மூலம் பணம் எடுக்க முயன்றனர். அது தோல்வியில் முடிந்ததால், சிறுசேரி, கல்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நண்பர் அறைகளில் பதுங்கினர்.
கொலை நடந்து ஒன்பது நாட்கள் ஆன போதிலும், போலீசார் கண்டுகொள்ளாததால், அங்கேயே இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த, 22ம் தேதி போலீசார் தேடுதல் வேட்டையை துவக்கியதாக தகவல் அறிந்ததும், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் உஜ்ஜல், கோல்கட்டாவிற்கு தப்பி சென்றான். பயண அட்டவணையின்படி, அந்த ரயில் நேற்று அதிகாலை கோல்கட்டா ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும். இந்த தகவலை, குற்றவாளிகளுடன் வேலை செய்து வந்த வாலிபர் ஒருவர் போலீசாரிடம் தெரிவித்தார்.
அந்த வாலிபரை அழைத்துக் கொண்டு விமானம் மூலம் நேற்று முன்தினம் கோல்கட்டாவிற்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் விரைந்தனர். அந்த மாநில போலீசார் உதவியுடன், கரக்பூர் ரயில் நிலைய சந்திப்பில் ரயிலை நிறுத்தி, உஜ்ஜல் மண்டலை கைது செய்தனர்.பின் நேற்று காலை, கோல்கட்டா கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு, நேற்று இரவு விமானம் மூலம் அங்கிருந்து அவர்களை சென்னைக்கு கொண்டு வந்தனர்.இவ்வாறு போலீசார்
தெரிவித்தனர்.
கத்தி, தோடுகள் பறிமுதல் : கைது செய்யப்பட்டுள்ள, உஜ்ஜல் மண்டலிடமிருந்து, உமா மகேஸ்வரியை கொலை செய்ய பயன்படுத்திய கத்தி மற்றும் அவர் காதுகளில் அணிந்திருந்த தோடுகளை போலீசார்
கைப்பற்றினர்.சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் உஜ்ஜல் மண்டல் கைது செய்யப்பட்டதை மட்டும், அதிகார பூர்வமாக அறிவித்துள்ளனர்.இருவரையும் இன்று, செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி விசாரணை காவலில் எடுக்க உள்ளனர்.இந்த கொலை வழக்கில், இந்திரஜித் மண்டல் என்பவன், ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவனை கைது செய்துள்ள போதிலும், கொலை நடந்த இடத்தில் காவலுக்கு இருந்ததாக அவன் தெரிவித்ததால், அவனை முக்கிய சாட்சியாக மாற்றுவது குறித்து, சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகின்றனர்.
ஏழு நாள் போலீஸ் காவல் : உமா மகேஸ்வரி கொலை வழக்கில் கைதான, மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த உத்தம் மண்டல், 24, ராம் மண்டல், 21, இருவரையும் போலீசார் நேற்று செங்கல்பட்டு முதலாவது
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை, மார்ச் 12ம் தேதிவரை, நீதிமன்ற காவலில் வைக்க, நீதிபதி அங்காள ஈஸ்வரி உத்தரவிட்டார். இந்த நிலையில், அவர்களை, சி.பி.சி.ஐ.டி., போலீசார், 10 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, டி.எஸ்.பி., வீரமணி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரணை செய்த நீதிபதி,
அவர்களை, ஏழு நாள் சி.பி.சி.ஐ.டி., போலீஸ் காவலில் விசாரணை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment