Sunday, 23 February 2014

சென்னையில் இந்து முன்னணி அலுவலகத்துக்கு மிரட்டல் கடிதம்: 27 தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக தகவல்

சென்னை, பிப்.23- 

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இந்து முன்னணி மாநில தலைமை அலுவலகத்துக்கு நேற்று ஒரு கடிதம் வந்தது. 

முகவரி இல்லாமல் வந்த அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது;- 

எனது பெயர் பாஷா சில தீவிரவாத அமைப்புகளால் பயிற்சி பெற்று மூளைச்சலவை செய்யப்பட்டு வாழ்கையை தொலைத்தவன். வெள்ளையன், ரமேஷ் கொலையில் சிறையில் உள்ள நபர்களை விடுதலை செய்ய மேலும் 9 இந்து அமைப்பு தலைவர்களை கடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் சுமார் 27 பயங்கரவாதிகள் சென்னை, தாம்பரம், திருவள்ளூர் போன்ற இடங்களில் தங்கி உள்ளனர். 

இந்த பகுதியில் உள்ள இந்து இயக்க தலைவர்களை கடத்தி கொலை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. நான் இன்று திருந்தி வாழ ஆசைப்படுகிறேன். இந்த கடிதத்தை நீங்கள் தயவு செய்து அலட்சியப்படுத்த வேண்டாம். வரும் மார்ச் 19-ந்தேதிக்குள் இவர்களை முடிக்க முடிவு செய்துள்ளனர். குறிப்பாக தாம்பரத்தில் உள்ள தலைவரை பின் தொடர மட்டும் 5 பேர் அங்கு தங்கி உள்ளனர். 

இன்று இந்த கடிதம் உங்களுக்கு சாதாரணமாக தெரியலாம். நான் வாழ விரும்புவதால் இதை கடிதம் மூலம் தெரிவிக்கிறேன். இஸ்மாயில், பக்ரூதின், மாலிக் ஆகியோர்களை சென்னையில் சில இடங்களில் தங்க வைக்கவும் திட்டம் உள்ளது. சொல்ல நினைத்ததை தெரிவித்துவிட்டேன். நீங்கள் நம்பபோறது இல்லை. நடக்க போவது இதுதான். சென்னை புறநகரில் உள்ள பகுதியில்தான் இவர்களை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். இவ்வாறு கடித்ததில் கூறப்பட்டிருக்கிறது. 

கடிதம் தொடர்பாக இந்து முன்னணி சென்னை மாநகர பொதுச்செயலாளர் இளங்கோவன் தலைமையில் நிர்வாகிகள் சிந்தாதிரிப்பேட்டை போலீஸ்நிலையத்திலும், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் டி.ஜி.பி. அலுவலகத்திலும் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் இந்து அமைப்பு தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது தொடர்பாகவும், மர்ம கடிதம் தொடர்பாகவும் விசாரணையில் இறங்கி உள்ளனர்.

No comments:

Post a Comment