மதுரை: மதுரை மாவட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் எந்த ஆண்டிலும் இல்லாதவாறு, வறட்சியான இக்காலகட்டத்திலும் நிரம்பி வழிகின்றன.
விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்யும்போது, அத்தொகையில் ஒரு சதவீதம் அரசுக்கு, மார்க்கெட் கட்டணமாக (செஸ்) செல்கிறது. இதனைக் கொண்டு, விவசாயிகளுக்கு கடனுதவி, விளைபொருட்களை சேமிக்கும் கிட்டங்கி வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. இதற்கு குவிண்டாலுக்கு நாளொன்றுக்கு 30 காசுகள் வாடகை செலுத்த வேண்டும். இவை, வேளாண் விற்பனை வாரியம் மூலம் செயல்படுத்தப்படுகின்றன.இவ்வகையில் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில், மதுரை, உசிலம்பட்டி, திருமங்கலம், வாடிப்பட்டியில், கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு கூடுதலான விளைபொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. நெல், சோளம், குதிரைவாலி போன்ற தானியங்கள் 6500 மெட்ரிக் டன் அளவிற்கு உள்ளன. கடந்த 2 ஆண்டாக சரியான மழைப்பொழிவு, விளைச்சல் இல்லாத நிலையிலும், விவசாயிகள் இங்கு சேமித்து வைத்திருப்பது
குறிப்பிடத்தக்கது.ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விவசாயிகள் வைத்திருக்கும் விளைபொருட்களுக்கு ரூ. 2 லட்சம் வரை ஐந்து சதவீத வட்டியில் கடனுதவியும் பெறலாம். இவ்வகையில், கடந்த ஆண்டைவிட, இந்தாண்டு ஒரு கோடி ரூபாய் அளவிற்கு கூடுதலாக கடன் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கதே.கடந்த ஆண்டு 155 விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை வைத்துவிட்டு, ரூ. 1.78 கோடி கடனுதவி பெற்றனர். ஆனால் இந்த ஆண்டு 193 விவசாயிகள் ரூ.2.82 கோடி கடனுதவி பெற்றுள்ளனர். மதுரை வேளாண் விற்பனை
குழுவின் இச்சாதனையை மாநில இயக்குனர் அனில்மேஷ்ராம் பாராட்டியுள்ளார்.இதன் செயலாளர் தவசுமுத்து கூறியதாவது: கடந்த காலங்களை காட்டிலும் தற்போது ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை விவசாயிகள் அதிகளவு பயன்படுத்துகின்றனர். கூடுதல்
கிட்டங்கி வசதி, அதிகாரிகள் விவசாயிகளிடம் ஏற்படுத்திய விழிப்புணர்வே
இதற்கு காரணம். விவசாயிகள் தானியங்களை சேமித்து வைப்பதற்கேற்ற ஈரப்பதத்துடன் உலரவைத்து கொண்டு வரலாம். இலவசமாக உலரவைப்பதற்கான களமும் இங்கு உள்ளது.இங்கு சேமித்து வைப்பதால், பொருட்களின் விலை கூடும்போது அதனை விற்கலாம். இதனால் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்பதை தவிர்க்க முடியும். மேலும் ஆறுமாதங்களுக்கு பின், ஏற்படும் மார்க்கெட் நிலவரத்தையும் இங்குள்ள 'டிஸ்பிளே'யில் அறிந்து கொள்ள முடியும்.இதுதவிர பவர் டில்லர், ரோட்டோவேட்டர், கதிரடிக்கும் இயந்திரம் என வேளாண் கருவிகளையும், மிகக்குறைந்த வாடகைக்கு பெறும் வசதியும் உள்ளது, என்றார்.
விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்யும்போது, அத்தொகையில் ஒரு சதவீதம் அரசுக்கு, மார்க்கெட் கட்டணமாக (செஸ்) செல்கிறது. இதனைக் கொண்டு, விவசாயிகளுக்கு கடனுதவி, விளைபொருட்களை சேமிக்கும் கிட்டங்கி வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. இதற்கு குவிண்டாலுக்கு நாளொன்றுக்கு 30 காசுகள் வாடகை செலுத்த வேண்டும். இவை, வேளாண் விற்பனை வாரியம் மூலம் செயல்படுத்தப்படுகின்றன.இவ்வகையில் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில், மதுரை, உசிலம்பட்டி, திருமங்கலம், வாடிப்பட்டியில், கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு கூடுதலான விளைபொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. நெல், சோளம், குதிரைவாலி போன்ற தானியங்கள் 6500 மெட்ரிக் டன் அளவிற்கு உள்ளன. கடந்த 2 ஆண்டாக சரியான மழைப்பொழிவு, விளைச்சல் இல்லாத நிலையிலும், விவசாயிகள் இங்கு சேமித்து வைத்திருப்பது
குறிப்பிடத்தக்கது.ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விவசாயிகள் வைத்திருக்கும் விளைபொருட்களுக்கு ரூ. 2 லட்சம் வரை ஐந்து சதவீத வட்டியில் கடனுதவியும் பெறலாம். இவ்வகையில், கடந்த ஆண்டைவிட, இந்தாண்டு ஒரு கோடி ரூபாய் அளவிற்கு கூடுதலாக கடன் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கதே.கடந்த ஆண்டு 155 விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை வைத்துவிட்டு, ரூ. 1.78 கோடி கடனுதவி பெற்றனர். ஆனால் இந்த ஆண்டு 193 விவசாயிகள் ரூ.2.82 கோடி கடனுதவி பெற்றுள்ளனர். மதுரை வேளாண் விற்பனை
குழுவின் இச்சாதனையை மாநில இயக்குனர் அனில்மேஷ்ராம் பாராட்டியுள்ளார்.இதன் செயலாளர் தவசுமுத்து கூறியதாவது: கடந்த காலங்களை காட்டிலும் தற்போது ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை விவசாயிகள் அதிகளவு பயன்படுத்துகின்றனர். கூடுதல்
கிட்டங்கி வசதி, அதிகாரிகள் விவசாயிகளிடம் ஏற்படுத்திய விழிப்புணர்வே
இதற்கு காரணம். விவசாயிகள் தானியங்களை சேமித்து வைப்பதற்கேற்ற ஈரப்பதத்துடன் உலரவைத்து கொண்டு வரலாம். இலவசமாக உலரவைப்பதற்கான களமும் இங்கு உள்ளது.இங்கு சேமித்து வைப்பதால், பொருட்களின் விலை கூடும்போது அதனை விற்கலாம். இதனால் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்பதை தவிர்க்க முடியும். மேலும் ஆறுமாதங்களுக்கு பின், ஏற்படும் மார்க்கெட் நிலவரத்தையும் இங்குள்ள 'டிஸ்பிளே'யில் அறிந்து கொள்ள முடியும்.இதுதவிர பவர் டில்லர், ரோட்டோவேட்டர், கதிரடிக்கும் இயந்திரம் என வேளாண் கருவிகளையும், மிகக்குறைந்த வாடகைக்கு பெறும் வசதியும் உள்ளது, என்றார்.
No comments:
Post a Comment