Sunday, 23 February 2014

மரணமடைந்த 10 போலீசார் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம்: ஜெயலலிதா

சென்னை, பிப். 27–
முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சர்புதின் 31.1.2014 அன்று கோணேரிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட சாலை விபத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த பிச்சைகனி 31.1.2014 அன்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியையும்,
சேலம் மாவட்டம், ஆத்தூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ரமேஷ் 1.2.2014 அன்று கொத்தாம்பாடி அருகே, சேலம் - ஆத்தூர் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியையும்,
திருச்சிராப்பள்ளி மாநகரம், திருச்சிராப்பள்ளி அரசு பொது மருத்துவமனை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த பங்கிராஜ் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 2.2.2014 அன்று காலமானார் என்ற செய்தியையும்,
ராமநாதபுரம் மாவட்டம், ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணி புரிந்து வந்த சத்தியேந்திரன் 3.2.2014 அன்று திருஉத்திர கோசமங்கை அருகே தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட சாலை விபத்தில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியையும்,
திருச்சிராப்பள்ளி மாவட்ட குற்றப்பதிவேடுகள் கூடத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த பூவேந்திரன் 5.2.2014 அன்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியையும்,
நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் மேற்கு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த பத்மநாபன் 6.2.2014 அன்று உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியையும்,
ஈரோடு மாவட்டம், அறச்சலூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சுந்தரம் 7.2.2014 அன்று அறச்சலூர், அவல்பூந்துறை - வெள்ளவேடு சாலை அருகே தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட சாலை விபத்தில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியையும்,
ஈரோடு மாவட்டம், சென்னிமலை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த யுவராசு 8.2.2014 அன்று காங்கயம் சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட சாலை விபத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்,
சேலம் மாவட்டம், பனை மரத்துப்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சந்திரன் 11.2.2014 அன்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
காவல் துறை ஆய்வாளர் சர்புதின்; சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பிச்சைகனி, பங்கிராஜ், பத்மநாபன், சந்திரன், தலைமைக் காவலர்கள் ரமேஷ், பூவேந்திரன், சுந்தரம், யுவராசு, காவலர் சத்தியேந்திரன், ஆகியோரின் அகால மரணத்தால் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் மறைந்த காவலர்களின் குடும்பங்களுக்கு முதல்– அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment