Thursday, 27 February 2014

மாதேஸ்வரன் மலைக்கு சிறப்பு பஸ் பக்தர்கள் வரத்து குறைவால் "வெறிச்'

மேட்டூர்: கர்நாடகாவில் உள்ள ஸ்ரீமலை மாதேஸ்வரன் ஸ்வாமி கோவிலில் மஹாசிவராத்திரி பண்டிகை விமர்சையாக நடக்கும். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டத்தில் இருந்து மேட்டூர் வழியாக சிவராத்திரிக்கு ஏராளமான பக்தர்கள் ஸ்ரீமலைக்கு செல்வர்
ஃபிப்.,27 மஹாசிவராத்திரியை முன்னிட்டு, மேட்டூரில் இருந்து நேற்று முதல் மாதேஸ்வரன்மலைக்கு சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது. மொத்தம், 50 சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. மாதேஸ்வரன் மலைக்கு நேற்று குறைவான பக்தர்களே சென்றதால் பஸ்களில் பெரும்பாலான இருக்கை காலியாக இருந்தது.
பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்ததால், ஐந்துக்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் மேட்டூர் பஸ் ஸ்டாண்ட் ரோட்டோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இன்று மேட்டூரில் இருந்து அதிக பக்தர்கள் மாதேஸ்வரன் மலைக்கு செல்லலாம் என்று போக்குவரத்து கழக ஊழியர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment