Thursday, 27 February 2014

திருவாரூரில் இன்று தையற்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க மாநாடு

சேலம்: தமிழ்நாடு தையற்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின், 17வது மாநில மாநாடு, இன்று, திருவாரூர், தெற்கு வீதி, ஏ.கே.எம்., திருமண மண்டபத்தில், காலை, 10 மணியளவில் துவங்குகிறது. காலை 9 மணிக்கு, திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து பேரணி நடக்கிறது.
மாநில துணை செயலாளர் குமார் தலைமை வகிக்கிறார். துணைத்தலைவர்கள் சேகர், செல்வம், துணை செயலாளர் சண்முகவேல் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கிறார்கள். மாநில துணைத்தலைவர் தேவராஜன், பேரணியை துவக்கி வைக்கிறார்.
மாநில அமைப்பு செயலாளர் லவ்லிபாலகிருஷ்ணன், 17வது மாநாட்டு கொடியை ஏற்றி வைக்கிறார். நாகை மாவட்ட தலைவர் செல்வராஜ், திருவாரூர் மாவட்ட தலைவர் புஷ்பவல்லி வீராச்சாமி, தஞ்சை மாவட்ட தலைவர் மங்கையர்கரசி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
நிறுவனரும், மாநில பொது செயலாளருமான மணி, சங்க கொடியை ஏற்றி வைக்கிறார். மாநில பொருளாளர் பாஷா, துணை பொது செயலாளர் ஜெயபால் ஆகியோர் தையல் மிஷன்கள் கண்காட்சி அரங்கை திறந்து வைக்கின்றனர். தொடர்ந்து, பொருளாதார மேம்பாட்டுக்கு தையல்தொழில் பலமா? பலவீனமா? என்கிற தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது.
அதையடுத்து, மாவட்ட நிர்வாகிகள் கவுரவிக்கப்படுகிறார்கள். மாலை, 4 மணிக்கு மாநில தலைவர் சுப்ரமணி தலைமையில் மாநாடு துவங்குகிறது. மாநில துணைத்தலைவர் சாமுவேல், துணை செயலர் சாந்தி, நாகை மாவட்ட செயலாளர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். தி.மலை மாவட்ட தலைவர் துரை வரவேற்கிறார்.
தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகின்றனர். பேராசிரியர் சொக்கலிங்கம், முனைவர் பாலசாண்டில்யன் ஆகியோரின் சிறப்பு சொற்பொழிவு, நலிந்த கலைஞர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது.
திருவாரூர் மாவட்ட செயலாளர் ரவி நன்றி கூறுகிறார்.

No comments:

Post a Comment