Thursday, 27 February 2014

முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் தே.மு.தி.க., பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு

சென்னை, பிப்.27-
முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் தே.மு.தி.க., பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு
திருத்தணி தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ.வான அருண் சுப்ரமணியனும், அணைக்கட்டு தொகுதி பா.ம.க எம்.எல்.ஏவுமான கலையரசனும் முதலமைச்சர் ஜெயலலிதாவை தலைமை செயலகத்தில் இன்று சந்தித்து பேசினார்கள்.

தங்களது தொகுதி வளர்ச்சி குறித்து இவர்கள் இருவரும் முதல்வரை சந்தித்து பேசியதாக கூறப்பட்டாலும், கட்சி தலைமை மீதுள்ள அதிருப்தி காரணமாகவே இவர்கள் முதல்வரை சந்தித்துள்ளதாக பேசப்படுகிறது.

இதன் மூலம் தேமுதிக அதிருப்தி எம்.எல்,ஏக்களின் பலம் 8 ஆக உயர்ந்துள்ளது. தற்பொதுள்ள சூழ்நிலையில் விஜயகாந்தை போலவே அவரது எதிர்க்கட்சி தலைவர் பதவியும் தடுமாறி வருகிறது.

No comments:

Post a Comment