சென்னை, பிப். 27,
சென்னை பெண் என்ஜினீயர் உமா மகேஸ்வரி கடந்த 13–ந் தேதி கொலை செய்யப்பட்டார்.
22–ந் தேதி அவரது உடல் கண்டு பிடிக்கப்பட்டது. சி.பி.சி.ஐ.டி போலீசார் இந்த வழக்கில் துப்பு துலக்கினார்கள். உமா மகேஸ்வரியின் ஏ.டி.எம். கார்டு மூலம் குற்றவாளிகள் சிக்கினார்கள்.
பணம் எடுத்த போது ரகசிய கேமராவில் பதிவான உருவத்தைக் கொண்டு போலீசார் குற்றவாளிகளை பொறி வைத்து பிடித்தனர். மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் உத்தம் மண்டல் (23), ராம் மண்டல் (23) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பெண் என்ஜினீயரை கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த முக்கிய குற்றவாளி உஜ்ஜன் மண்டல் (22) நேற்று கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டான். இன்று அவன் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறான். இந்திரஜித் என்பவனும் சிக்கி உள்ளான்.
முதலில் கைது செய்யப்பட்ட உத்தம் மண்டல், ராம் மண்டல் ஆகியோரை கோர்ட்டில் ஆஜர் செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் இருவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சம்பவ இடத்துக்கு நேரில் அழைத்துச் சென்று கொலை சம்பவத்தை உறுதி செய்தனர். அவர்களிடம் இருந்த உமா மகேஸ்வரியின் கிரிடிட் கார்டு, காது தோடு, மோதிரம், செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
3–வதாக கைது ஆன முக்கிய குற்றவாளியான உஜ்ஜன் மண்டல் இன்று செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறான். பின்னர் அவனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
என்ஜினீயர் உமா மகேஸ்வரியை கடத்திச் சென்று கற்பழித்த 3 பேருக்கு, அவர்களுடன் கட்டி வேலை பார்த்து வந்த இந்திரஜித் மண்டல் என்பவர் உதவி செய்துள்ளான். அவனையும் போலீசார் பிடித்துச் சென்றனர்.
ஆனால், அவன் ‘‘யாராவது வந்தால் தகவல் சொல்வதற்காக 3 பேருக்கும் காவலாக தூரத்தில் நின்றேன்’’ என்று தெரிவித்துள்ளான்.
எனவே, இந்திரஜித் மண்டல் இந்த கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டு உள்ளான். விரைவில் அடையாள அணிவகுப்பு நடைபெற உள்ளது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை தயாராகி வருகிறது. வழக்கை விரைவில் முடித்து கொலையாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதில் போலீசார் தீவிரமாக உள்ளனர்.
சென்னை பெண் என்ஜினீயர் உமா மகேஸ்வரி கடந்த 13–ந் தேதி கொலை செய்யப்பட்டார்.
22–ந் தேதி அவரது உடல் கண்டு பிடிக்கப்பட்டது. சி.பி.சி.ஐ.டி போலீசார் இந்த வழக்கில் துப்பு துலக்கினார்கள். உமா மகேஸ்வரியின் ஏ.டி.எம். கார்டு மூலம் குற்றவாளிகள் சிக்கினார்கள்.
பணம் எடுத்த போது ரகசிய கேமராவில் பதிவான உருவத்தைக் கொண்டு போலீசார் குற்றவாளிகளை பொறி வைத்து பிடித்தனர். மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் உத்தம் மண்டல் (23), ராம் மண்டல் (23) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பெண் என்ஜினீயரை கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த முக்கிய குற்றவாளி உஜ்ஜன் மண்டல் (22) நேற்று கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டான். இன்று அவன் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறான். இந்திரஜித் என்பவனும் சிக்கி உள்ளான்.
முதலில் கைது செய்யப்பட்ட உத்தம் மண்டல், ராம் மண்டல் ஆகியோரை கோர்ட்டில் ஆஜர் செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் இருவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சம்பவ இடத்துக்கு நேரில் அழைத்துச் சென்று கொலை சம்பவத்தை உறுதி செய்தனர். அவர்களிடம் இருந்த உமா மகேஸ்வரியின் கிரிடிட் கார்டு, காது தோடு, மோதிரம், செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
3–வதாக கைது ஆன முக்கிய குற்றவாளியான உஜ்ஜன் மண்டல் இன்று செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறான். பின்னர் அவனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
என்ஜினீயர் உமா மகேஸ்வரியை கடத்திச் சென்று கற்பழித்த 3 பேருக்கு, அவர்களுடன் கட்டி வேலை பார்த்து வந்த இந்திரஜித் மண்டல் என்பவர் உதவி செய்துள்ளான். அவனையும் போலீசார் பிடித்துச் சென்றனர்.
ஆனால், அவன் ‘‘யாராவது வந்தால் தகவல் சொல்வதற்காக 3 பேருக்கும் காவலாக தூரத்தில் நின்றேன்’’ என்று தெரிவித்துள்ளான்.
எனவே, இந்திரஜித் மண்டல் இந்த கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டு உள்ளான். விரைவில் அடையாள அணிவகுப்பு நடைபெற உள்ளது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை தயாராகி வருகிறது. வழக்கை விரைவில் முடித்து கொலையாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதில் போலீசார் தீவிரமாக உள்ளனர்.
No comments:
Post a Comment