பல்லாவரம் : பல்லாவரத்தில்
கிணற்றின் மீது ரேஷன் கடை கட்டப்பட்டு உள்ளது. கட்டடத்தின் ஆபத்தான
நிலைமையை கருதி, உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரிகள், அந்த
கட்டடத்தில், உணவு பொருட்களை வைக்க முடியாது என, மறுத்து விட்டனர்.
பல்லாவரம், சரஸ்வதி காலனியில், 80 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிணறு இருந்தது. 20 அடி விட்டம் கொண்ட அந்த கிணற்றில், எப்போதும் 70 அடிக்கு தண்ணீர் இருக்கும். பகுதிவாசிகள், அந்த கிணற்று நீரை, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்வரை பயன்படுத்தி வந்தனர்.
ரூ.7 லட்சம் வீண்
இந்த நிலையில், சரஸ்வதி காலனி, தர்கா சாலையில், வாடகை கட்டடத்தில் இயங்கும் (எண்:44) ரேஷன் கடைக்கு சொந்த கட்டடம் கட்ட எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, கடந்த ஆண்டு, ஏழு லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
கடந்த, மூன்று மாதங்களுக்கு முன், ரேஷன் கடை கட்ட, அந்த பகுதியில் இடம் தேடிய பொதுப்பணி துறை அதிகாரிகள், கிணற்றின் மீதே, ரேஷன் கடையை கட்ட திட்டம் தீட்டினர்.
இதற்கு, அந்த பகுதிவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தும், கடந்த மாதம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு, கடந்த, 15ம் தேதி திறப்பு விழா நடந்தது.
இந்த நிலையில், கிணறு மீது கட்டப்பட்ட கட்டடத்தின் வலு மீது ஏற்பட்ட சந்தேகத்தால், அந்த கட்டடம் தங்களுக்கு வேண்டாம் என, உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அதனால், மக்கள் வரிப்பணம் ஏழு லட்சம் ரூபாய் வீணடிக்கப்பட்டதாக பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
௩௦ டன் எடை தாங்குமா?
இது குறித்து, சரஸ்வதி காலனி பகுதிவாசிகள் கூறுகையில், 'கிணற்று நீரால், எங்கள் பகுதியின் நிலத்தடி நீர் குறையாமல் இருந்தது. கிணற்றின் மீது கட்டடம் கட்ட முயன்ற போது, நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால், அதையும் மீறி கட்டிவிட்டனர். இந்த கட்டடம் கட்டப்படும் போது, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் நேரில் வந்து பார்த்தும், தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை' என்றனர்.
உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், 'டன் கணக்கில் பொருள் இருப்பு வைத்து வினியோகிக்க வேண்டிய பாதுகாப்பான நிலையில், கட்டடம் இல்லை. கட்டடத்தை கட்டி தருவதுடன் அதிகாரிகள் பணி முடிந்தது. அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பு? அந்த கட்டடம் வேண்டாம் என, கூறிவிட்டோம்' என்றனர்.
மேலும் இரண்டு தளம்!
தற்போது வாடகைக்கு இயங்கும் ரேஷன் கடையில், 1,400 குடும்ப அட்டைகளுக்கு வினியோகம் நடக்கிறது. 30 ஆயிரம் டன் எடையில், மாதம் தோறும், உணவு பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு வினியோகிக்கப்படுகிறது.
புதிய கட்டடத்தில், தரை தளத்தில் ரேஷன் கடையும், முதல் தளத்தில் கூட்டுறவு துறை அலுவலகமும், இரண்டாம் தளத்தில், நுாலகமும் அமைக்க, திட்டமிடப்பட்டு உள்ளது. இப்படி, கட்டத்தின் உயரத்தை அதிகரித்தால், பாரம் தாங்காமல், கட்டடம் இடிந்து விழும் நிலை கூட ஏற்படலாம் என, அந்த பகுதிவாசிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
பல்லாவரம், சரஸ்வதி காலனியில், 80 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிணறு இருந்தது. 20 அடி விட்டம் கொண்ட அந்த கிணற்றில், எப்போதும் 70 அடிக்கு தண்ணீர் இருக்கும். பகுதிவாசிகள், அந்த கிணற்று நீரை, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்வரை பயன்படுத்தி வந்தனர்.
ரூ.7 லட்சம் வீண்
இந்த நிலையில், சரஸ்வதி காலனி, தர்கா சாலையில், வாடகை கட்டடத்தில் இயங்கும் (எண்:44) ரேஷன் கடைக்கு சொந்த கட்டடம் கட்ட எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, கடந்த ஆண்டு, ஏழு லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
கடந்த, மூன்று மாதங்களுக்கு முன், ரேஷன் கடை கட்ட, அந்த பகுதியில் இடம் தேடிய பொதுப்பணி துறை அதிகாரிகள், கிணற்றின் மீதே, ரேஷன் கடையை கட்ட திட்டம் தீட்டினர்.
இதற்கு, அந்த பகுதிவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தும், கடந்த மாதம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு, கடந்த, 15ம் தேதி திறப்பு விழா நடந்தது.
இந்த நிலையில், கிணறு மீது கட்டப்பட்ட கட்டடத்தின் வலு மீது ஏற்பட்ட சந்தேகத்தால், அந்த கட்டடம் தங்களுக்கு வேண்டாம் என, உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அதனால், மக்கள் வரிப்பணம் ஏழு லட்சம் ரூபாய் வீணடிக்கப்பட்டதாக பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
௩௦ டன் எடை தாங்குமா?
இது குறித்து, சரஸ்வதி காலனி பகுதிவாசிகள் கூறுகையில், 'கிணற்று நீரால், எங்கள் பகுதியின் நிலத்தடி நீர் குறையாமல் இருந்தது. கிணற்றின் மீது கட்டடம் கட்ட முயன்ற போது, நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால், அதையும் மீறி கட்டிவிட்டனர். இந்த கட்டடம் கட்டப்படும் போது, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் நேரில் வந்து பார்த்தும், தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை' என்றனர்.
உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், 'டன் கணக்கில் பொருள் இருப்பு வைத்து வினியோகிக்க வேண்டிய பாதுகாப்பான நிலையில், கட்டடம் இல்லை. கட்டடத்தை கட்டி தருவதுடன் அதிகாரிகள் பணி முடிந்தது. அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பு? அந்த கட்டடம் வேண்டாம் என, கூறிவிட்டோம்' என்றனர்.
மேலும் இரண்டு தளம்!
தற்போது வாடகைக்கு இயங்கும் ரேஷன் கடையில், 1,400 குடும்ப அட்டைகளுக்கு வினியோகம் நடக்கிறது. 30 ஆயிரம் டன் எடையில், மாதம் தோறும், உணவு பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு வினியோகிக்கப்படுகிறது.
புதிய கட்டடத்தில், தரை தளத்தில் ரேஷன் கடையும், முதல் தளத்தில் கூட்டுறவு துறை அலுவலகமும், இரண்டாம் தளத்தில், நுாலகமும் அமைக்க, திட்டமிடப்பட்டு உள்ளது. இப்படி, கட்டத்தின் உயரத்தை அதிகரித்தால், பாரம் தாங்காமல், கட்டடம் இடிந்து விழும் நிலை கூட ஏற்படலாம் என, அந்த பகுதிவாசிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment