Thursday, 27 February 2014

சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரசார் 100 பேர் கைது


சென்னை, பிப். 27–சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரசார் 100 பேர் கைது
வளசர வாக்கம் சின்ன போரூர் பகுதியில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வீடு உள்ளது. சத்தியமூர்த்தி பவனில் கல்வீசி தாக்குதல், ராஜீவ் சிலை உடைப்பு சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து சீமான் வீட்டை முற்றுகையிட காங்கிரசார் திரண்டனர்.
வளசரவாக்கம் நகர காங்கிரஸ் தலைவர் பாலமுருகன், வளசரவாக்கம் நகராட்சி முன்னாள் தலைவர் ஈ.சி சேகர் தலைமையில் பாலன், சோமசுந்தரம், உமா, விஜய குமார் நாகராஜ், முருகன் உள்பட 100–க்கும் மேற்பட்ட காங்கிரசார் வளசரவாக்கம் நகராட்சி அலுவலகத்தில் இருந்து சீமான் வீட்டை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர்.
வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் கைதானவர்கள் அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
ராஜீவ் சிலை உடைப்பை கண்டித்து இன்று காங்கிரசார் வேப்பேரியில் உள்ள கமிஷனர் அலுவலகத்தை முற்று கையிடப்போவதாக தகவல் கிடைத்தது.
இதையொட்டி அங்கு ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இதனால் கமிஷனர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

No comments:

Post a Comment