கோவை : அடுக்கு மாடிக் குடியிருப்பி லுள்ள ஒரு வீட்டின் உரிமையாளர் சொத்து
வரி செலுத்தாவிட்டாலும், ஒட்டு மொத்த குடியிருப்புக்கும் குடிநீர் இணைப்பு
துண்டிக்கப்படுமென்ற மாநகராட்சியின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு
கிளம்பியுள்ளது.
கோவை நகரில், நிலத்தின் தேவையும், மதிப்பும் அதிகரித்தும் வருவதால், சமீபகாலமாக அடுக்கு மாடிக் குடியிருப்புகளின் எண்ணிக்கை பெருகி வருகிறது. நகர மயமாதலில், அடுக்கு மாடிக் குடியிருப்புகளின் வளர்ச்சியைத் தவிர்க்கவே முடியாது என்பதால், இவற்றில் வாழும் மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு, திட்டங்களைத் தீட்ட வேண்டிய அவசியம், மாநகராட்சி நிர்வாகத்துக்கு உள்ளது.
ஆனால், இவற்றில் வசிப்போர் யாரும், ஓட்டுப்போடாதவர்கள் என்ற தவறான அபிப்பிராயத்தில், அடுக்கு மாடிக் குடியிருப்புவாசிகளை மக்கள் பிரதிநிதிகளும், அதிகாரிகளும் புறக்கணிப்பது தொடர்ந்து வருகிறது; வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, பூத் ஸ்லிப் கொடுப்பது உட்பட பல விஷயங்களிலும், அடுக்கு மாடிக் குடியிருப்புகளை முற்றிலுமாகத்தவிர்ப்பது, வாடிக்கையாகி விட்டது.
இதன் அடுத்த கட்டமாக, அடுக்கு மாடிக் குடியிருப்பு வாசிகளுக்கு, மாநகராட்சி நிர்வாகத்திலிருந்து சமீபத்தில் பகிரங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது; அதாவது, அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் உள்ள வீடுகளில் (பிளாட்) ஒரே ஒரு வீட்டுக்கு சொத்துவரி செலுத்தா விட்டாலும், அந்த குடியிருப்புக்கான ஒட்டு மொத்த குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படுமென்பதே அந்த எச்சரிக்கை .
தனி வீடுகளைப்போல, அடுக்கு மாடிக் குடியிருப்புகளுக்கு, தனித்தனி குடிநீர் இணைப்புகள் வழங்கப்படுவதில்லை; மாறாக, ஒரே இணைப்பாக 'பல்க் கனெக்ஷன்' மட்டுமே வழங்கப்படுகிறது; அதிலிருந்து அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஓர் அடுக்கு மாடிக் குடியிருப்பில் 100 வீடுகள் இருக்கும்போது, ஒரே ஒரு வீட்டின் உரிமையாளர் சொத்து வரி செலுத்தாமல் இருந்தாலும், அதற்காக குடிநீர் இணைப்பைத் துண்டிப்பது என்பது, சட்டவிரோதம் என்று பல தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஒரு தெருவில் 100 வீடுகள் இருப்பதைப்போலவே, ஓர் அடுக்கு மாடிக்குடியிருப்பில் 100 வீடுகள் இருப்பதால், அவற்றையும் ஒரு தெருவாகவே உள்ளாட்சி நிர்வாகம், கணக்கில் கொள்ள வேண்டும்; மாநகராட்சியின் இந்த நடவடிக்கை, ஒரு தெருவில் ஒரு வீட்டில் சொத்து வரி செலுத்தாத காரணத்துக்காக, தெரு முழுவதும் உள்ள இணைப்புகளைத் துண்டிப்பதற்குச் சமமாகவே கருதப்படுகிறது.
அடுக்கு மாடிக் குடியிருப்புகளைப் பொறுத்தவரை, ஒவ்வொரு குடியிருப்பிலும் ஒன்று அல்லது இரண்டு 'பிளாட்' களிலாவது, நிரந்தரமாக யாரும் குடியிருக்காமல், அவ்வப்போது மட்டும் குடியிருப்பது வழக்கம்; அதேபோல, குடியிருப்போர் நலச்சங்கம் அமைத்தாலும், அதன் முடிவுக்குக் கட்டுப்படாமல், முரணாக செயல்படுவோரும் ஒவ்வொரு குடியிருப்பிலும் ஒன்றிரண்டு பேர் இருப்பதும் வாடிக்கை.
இத்தகைய 'பிளாட்' உரிமையாளர்கள், மற்றவர்களைப் பாதிப்புக்குள்ளாக்க வேண்டுமென்பதற்காகவே, ஓரிருவர் இந்த சொத்து வரியைச் செலுத்தாமல் தவிர்க்கும் வாய்ப்புகள் அதிகம்; இதனால், ஒருவர் செய்யும் தவறுக்காக, மீதமுள்ள 99 பேர்க்கும் சேர்த்து, மாநகராட்சி நிர்வாகம் தண்டனை தருவது எந்த வகை நியாயம் என்று குடியிருப்புவாசிகள் கொந்தளிக்கின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன், இதேபோன்ற முயற்சி நடந்தபோது, கோயம்புத்துார் கன்ஸ்யூமர் காஸ் அமைப்பு, அதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தது; சட்டரீதியாகவும் அதைத்தடுக்க முயன்றதன் காரணமாக, அந்த திட்டம் கை விடப்பட்டது. அதேபோல, இப்போது வந்துள்ள அறிவிப்புக்கும், இவ்வமைப்பின் செயலர் கதிர்மதியோன், தனது எதிர்ப்பைப் பதிவு செய்து, மாநகராட்சி கமிஷனருக்கு கடிதமும் எழுதியுள்ளார்.
அவர் கூறுகையில், ''சட்டத்தை மதிக்காத ஒருவர் செய்யும் தவறுக்காக, சட்டத்தை மதிக்கும் 99 பேரைத் தண்டிப்பது எந்த வகையிலும் நியாயமில்லை; தற்போது, எத்தனை ஆண்டுகள் கழித்து சொத்து வரி செலுத்தினாலும், அதே தொகை மட்டுமே வசூலிக்கப்படுகிறது; இந்த ஆண்டுக்கான சொத்து வரியை, அடுத்த ஆண்டில் செலுத்தினால், பல மடங்கு அபராதம் வசூலிக்கலாம்,'' என்றார்.
இது குறித்து, மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''பல கோடி ரூபாய் செலவழித்து, 'பிளாட்' வாங்கும் பலரும், சில ஆயிரம் ரூபாய் சொத்து வரியைக் கூட செலுத்த மறுக்கின்றனர்; அவர்களை எச்சரிக்கும் விதமாகவே, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது; ஆனால், இதுவரை எந்த அடுக்கு மாடிக் குடியிருப்பின் மீதும் இந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை,'' என்றார்.
ஒரு வேளை, இந்த அறிவிப்பை ஒன்றிரண்டு அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் செயல் படுத்தினாலும், ஒட்டு மொத்தமாக, கோவையிலுள்ள அடுக்கு மாடிக் குடியிருப்புவாசிகளின் கோபத்தையும் மாநகராட்சி நிர்வாகம் சம்பாதிக்கும் என்பது நிச்சயம்.
கோவை நகரில், நிலத்தின் தேவையும், மதிப்பும் அதிகரித்தும் வருவதால், சமீபகாலமாக அடுக்கு மாடிக் குடியிருப்புகளின் எண்ணிக்கை பெருகி வருகிறது. நகர மயமாதலில், அடுக்கு மாடிக் குடியிருப்புகளின் வளர்ச்சியைத் தவிர்க்கவே முடியாது என்பதால், இவற்றில் வாழும் மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு, திட்டங்களைத் தீட்ட வேண்டிய அவசியம், மாநகராட்சி நிர்வாகத்துக்கு உள்ளது.
ஆனால், இவற்றில் வசிப்போர் யாரும், ஓட்டுப்போடாதவர்கள் என்ற தவறான அபிப்பிராயத்தில், அடுக்கு மாடிக் குடியிருப்புவாசிகளை மக்கள் பிரதிநிதிகளும், அதிகாரிகளும் புறக்கணிப்பது தொடர்ந்து வருகிறது; வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, பூத் ஸ்லிப் கொடுப்பது உட்பட பல விஷயங்களிலும், அடுக்கு மாடிக் குடியிருப்புகளை முற்றிலுமாகத்தவிர்ப்பது, வாடிக்கையாகி விட்டது.
இதன் அடுத்த கட்டமாக, அடுக்கு மாடிக் குடியிருப்பு வாசிகளுக்கு, மாநகராட்சி நிர்வாகத்திலிருந்து சமீபத்தில் பகிரங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது; அதாவது, அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் உள்ள வீடுகளில் (பிளாட்) ஒரே ஒரு வீட்டுக்கு சொத்துவரி செலுத்தா விட்டாலும், அந்த குடியிருப்புக்கான ஒட்டு மொத்த குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படுமென்பதே அந்த எச்சரிக்கை .
தனி வீடுகளைப்போல, அடுக்கு மாடிக் குடியிருப்புகளுக்கு, தனித்தனி குடிநீர் இணைப்புகள் வழங்கப்படுவதில்லை; மாறாக, ஒரே இணைப்பாக 'பல்க் கனெக்ஷன்' மட்டுமே வழங்கப்படுகிறது; அதிலிருந்து அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஓர் அடுக்கு மாடிக் குடியிருப்பில் 100 வீடுகள் இருக்கும்போது, ஒரே ஒரு வீட்டின் உரிமையாளர் சொத்து வரி செலுத்தாமல் இருந்தாலும், அதற்காக குடிநீர் இணைப்பைத் துண்டிப்பது என்பது, சட்டவிரோதம் என்று பல தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஒரு தெருவில் 100 வீடுகள் இருப்பதைப்போலவே, ஓர் அடுக்கு மாடிக்குடியிருப்பில் 100 வீடுகள் இருப்பதால், அவற்றையும் ஒரு தெருவாகவே உள்ளாட்சி நிர்வாகம், கணக்கில் கொள்ள வேண்டும்; மாநகராட்சியின் இந்த நடவடிக்கை, ஒரு தெருவில் ஒரு வீட்டில் சொத்து வரி செலுத்தாத காரணத்துக்காக, தெரு முழுவதும் உள்ள இணைப்புகளைத் துண்டிப்பதற்குச் சமமாகவே கருதப்படுகிறது.
அடுக்கு மாடிக் குடியிருப்புகளைப் பொறுத்தவரை, ஒவ்வொரு குடியிருப்பிலும் ஒன்று அல்லது இரண்டு 'பிளாட்' களிலாவது, நிரந்தரமாக யாரும் குடியிருக்காமல், அவ்வப்போது மட்டும் குடியிருப்பது வழக்கம்; அதேபோல, குடியிருப்போர் நலச்சங்கம் அமைத்தாலும், அதன் முடிவுக்குக் கட்டுப்படாமல், முரணாக செயல்படுவோரும் ஒவ்வொரு குடியிருப்பிலும் ஒன்றிரண்டு பேர் இருப்பதும் வாடிக்கை.
இத்தகைய 'பிளாட்' உரிமையாளர்கள், மற்றவர்களைப் பாதிப்புக்குள்ளாக்க வேண்டுமென்பதற்காகவே, ஓரிருவர் இந்த சொத்து வரியைச் செலுத்தாமல் தவிர்க்கும் வாய்ப்புகள் அதிகம்; இதனால், ஒருவர் செய்யும் தவறுக்காக, மீதமுள்ள 99 பேர்க்கும் சேர்த்து, மாநகராட்சி நிர்வாகம் தண்டனை தருவது எந்த வகை நியாயம் என்று குடியிருப்புவாசிகள் கொந்தளிக்கின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன், இதேபோன்ற முயற்சி நடந்தபோது, கோயம்புத்துார் கன்ஸ்யூமர் காஸ் அமைப்பு, அதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தது; சட்டரீதியாகவும் அதைத்தடுக்க முயன்றதன் காரணமாக, அந்த திட்டம் கை விடப்பட்டது. அதேபோல, இப்போது வந்துள்ள அறிவிப்புக்கும், இவ்வமைப்பின் செயலர் கதிர்மதியோன், தனது எதிர்ப்பைப் பதிவு செய்து, மாநகராட்சி கமிஷனருக்கு கடிதமும் எழுதியுள்ளார்.
அவர் கூறுகையில், ''சட்டத்தை மதிக்காத ஒருவர் செய்யும் தவறுக்காக, சட்டத்தை மதிக்கும் 99 பேரைத் தண்டிப்பது எந்த வகையிலும் நியாயமில்லை; தற்போது, எத்தனை ஆண்டுகள் கழித்து சொத்து வரி செலுத்தினாலும், அதே தொகை மட்டுமே வசூலிக்கப்படுகிறது; இந்த ஆண்டுக்கான சொத்து வரியை, அடுத்த ஆண்டில் செலுத்தினால், பல மடங்கு அபராதம் வசூலிக்கலாம்,'' என்றார்.
இது குறித்து, மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''பல கோடி ரூபாய் செலவழித்து, 'பிளாட்' வாங்கும் பலரும், சில ஆயிரம் ரூபாய் சொத்து வரியைக் கூட செலுத்த மறுக்கின்றனர்; அவர்களை எச்சரிக்கும் விதமாகவே, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது; ஆனால், இதுவரை எந்த அடுக்கு மாடிக் குடியிருப்பின் மீதும் இந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை,'' என்றார்.
ஒரு வேளை, இந்த அறிவிப்பை ஒன்றிரண்டு அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் செயல் படுத்தினாலும், ஒட்டு மொத்தமாக, கோவையிலுள்ள அடுக்கு மாடிக் குடியிருப்புவாசிகளின் கோபத்தையும் மாநகராட்சி நிர்வாகம் சம்பாதிக்கும் என்பது நிச்சயம்.
No comments:
Post a Comment