Sunday, 23 February 2014

திருவள்ளூரில் சோனியா உருவபொம்மை எரிப்பு: 50 பேர் கைது

சென்னை, பிப். 23–
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் தமிழக முதல்–அமைச்சர் சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
தமிழகம் முழுவதும் அனைத்து கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என அனைவரும் இந்த தீர்மானத்திற்கு வரவேற்பு தெரிவித்து வந்த நிலையில் காங்கிரஸ் கட்சியினர் 7 பேரின் விடுதலையை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இதை கண்டிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியினர் திருவள்ளூரில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி செய்தனர். அப்போது போலீசார் அதை தடுக்க முயன்றனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
தொடர்ந்து சோனியா காந்தியின் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தி கண்டன முழக்கமிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூரில் சோனியா உருவபொம்மை எரிப்பு: 50 பேர் கைது

No comments:

Post a Comment