புதுடெல்லி, பிப். 27-
சத்தீஸ்கர் மாநிலம் ஜஞ்ச்கீர் தொகுதி பா.ஜனதா எம்.பி. கருணா சுக்லா (63). முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மருமகளான இவர், சத்தீஸ்கர் பா.ஜனதா மகளிரணி துணைத்தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார்.
கடந்த ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக கட்சியில் இருந்து திடீரென விலகிய கருணா சுக்லா, தன்னை கட்சியின் மூத்த தலைவர்கள் புறக்கணிப்பதாக குற்றம் சாட்டினார். எதையும் ஆலோசிக்காமல் தனது கட்சிப்பதவிகளை பறித்ததால் வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், கருணா சுக்லா இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் கட்சி மக்களுக்காகப் பணியாற்றும் ஜனநாயக கட்சி என்பதால் அக்கட்சியில் இணைய முடிவெடுத்ததாக கருணா சுக்லா கூறியுள்ளார். வாஜ்பாய்க்குப் பிறகு பா.ஜனதா கட்சியின் நடவடிக்கைகளுக்கும், பேச்சுக்கும் இடையே ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்தன.
காங்கிரஸ் கட்சிக்கு நான் வலிமை சேர்த்து, மக்களவைத் தேர்தலில் காங்கிரசை வெற்றி பெறச் செய்வேன் என்றும் அவர் தெரிவித்தார்.
சத்தீஸ்கர் மாநிலம் ஜஞ்ச்கீர் தொகுதி பா.ஜனதா எம்.பி. கருணா சுக்லா (63). முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மருமகளான இவர், சத்தீஸ்கர் பா.ஜனதா மகளிரணி துணைத்தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார்.
கடந்த ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக கட்சியில் இருந்து திடீரென விலகிய கருணா சுக்லா, தன்னை கட்சியின் மூத்த தலைவர்கள் புறக்கணிப்பதாக குற்றம் சாட்டினார். எதையும் ஆலோசிக்காமல் தனது கட்சிப்பதவிகளை பறித்ததால் வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், கருணா சுக்லா இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் கட்சி மக்களுக்காகப் பணியாற்றும் ஜனநாயக கட்சி என்பதால் அக்கட்சியில் இணைய முடிவெடுத்ததாக கருணா சுக்லா கூறியுள்ளார். வாஜ்பாய்க்குப் பிறகு பா.ஜனதா கட்சியின் நடவடிக்கைகளுக்கும், பேச்சுக்கும் இடையே ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்தன.
காங்கிரஸ் கட்சிக்கு நான் வலிமை சேர்த்து, மக்களவைத் தேர்தலில் காங்கிரசை வெற்றி பெறச் செய்வேன் என்றும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment