Thursday, 6 February 2014

இங்கிலாந்தில் வீடியோ கேம்ஸ் காட்சிகளை பார்த்து சகோதரியை கற்பழித்த 13 வயது பள்ளி மாணவன்

லண்டன்,
இங்கிலாந்து நாட்டில் வீடியோ கேம்ஸ் விளையாட்டில் பார்த்த காட்சிகளை செயல்படுத்த நினைத்து தனது 8 வயது சகோதரியை 13 வயது பள்ளி மாணவன் கற்பழித்த சம்பவம் நடந்துள்ளது.  இதனை அடுத்து அவன் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.  அதில், குற்றத்தை அச்சிறுவன் ஒப்பு கொண்டான்.  எக்ஸ் பாக்ஸ் இணையதளத்தின் வீடியோ கேம்ஸ் காட்சிகளை பார்த்த பின்பு அதனை நடைமுறைப்படுத்தி பார்க்க விரும்பியுள்ளான்.
அதற்காக தனது சகோதரியை தேர்வு செய்தான்.  ஏனென்றால் அவள் மிக குறைந்த வயதுடையவள்.  மேலும், நடந்ததை மீண்டும் நினைவில் வைத்திருக்கமாட்டாள் என கருதியதாக அவன் கூறியுள்ளான்.  இதனை அடுத்து பிளாக்பர்ன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலீசார் அவனை ஆஜர்படுத்தினர்.  அங்கு சகோதரியை தவறான நடத்தைக்கு பயன்படுத்தியதையும், கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபட்டதையும் சிறுவன் ஒப்பு கொண்டான்.
தடை
இதனை அடுத்து, சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.  அவன் தனது உறவினர்களுடன் அனுப்பப்பட்டான்.  எனினும், சகோதரியிடம் இருந்து தனித்து வைக்கப்பட்டு உள்ளான்.  இந்த சம்பவத்தை அடுத்து அந்நாட்டு அரசு, 2014ம் ஆண்டு இறுதிக்குள், வீடியோ கேம்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் விளையாட்டுகள் உட்பட இன்டெர்நெட் கருவிகள் கொண்டு வயதுக்கு வந்தோர் பார்க்கும் காட்சிகளை பார்ப்பதற்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளது.
சிறுவன் பயன்படுத்திய எக்ஸ் பாக்ஸ் இணையதளத்தின் அதிகாரிகள் கூறும்போது, இதுபோன்ற காட்சிகளை பெற்றோர் அனுமதியுடன் பார்க்கும் வகையில் தடுப்பு முறைகளை பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளது.
இன்டெர்நெட் கட்டுப்பாடு
இந்த வீடியோ கேம்ஸ் தயாரிப்பை வெளியிட்ட மைக்ரோசாப்ட் நிறுவனம், இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவருக்கும் எங்களது இரக்கத்தை தெரிவித்து கொள்கிறோம்.  மைக்ரோசாப்ட் நிறுவனம் உருவாக்கியுள்ள தயாரிப்புகள், பெற்றோர் தங்களது குழந்தைகள் விளையாட ஏற்றது எது என்றும் இணையதளத்தில் எதனை பார்க்கலாம் என்றும் அனுமதி அளிக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்க ஏற்ற முறையில் உள்ளவை ஆகும்.
எனவே, குழந்தைகளை தவறான வழியில் செல்லாத வகையில் பெற்றோர் எளிதில் கட்டுப்படுத்தலாம் என்றும் கூறியுள்ளனர்.  குறிப்பாக, எக்ஸ் பாக்ஸ் கணக்கில் சிறுவர்கள் பார்க்கும்போது, அது இன்டர்நெட் பயன்பாட்டை தானாக ஆப் செய்து விடும் வாய்ப்பை வழங்கியுள்ளது.
எனவே, பெற்றோர் தங்களது குழந்தைகள் செட்டிங்சில் ஏதேனும் மாற்றி உள்ளனரா என்று கவனமுடன் பார்க்க வேண்டும் என்று அவர்கள் மேலும் கூறியுள்ளனர். 
மற்றொரு சம்பவம்
கடந்த வருடம் நவம்பரில், 12 வயது சிறுவன் ஒருவன், 10 வயதிற்கு குறைந்த தனது சகோதரியை 3 முறை கற்பழித்ததாக ஒப்பு கொண்டுள்ளான். அவன் படித்த பள்ளியிலேயே போர்னோகிராபி பாலியல் தொடர்பான இணையதளத்தை பார்த்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளான்.  பின்னர் அதனை செயல்படுத்தி பார்க்க நினைத்த அவன் இத்தகைய குற்ற செயலில் ஈடுபட்டு உள்ளான்.
ஒரு வருடமாக தவறான நடத்தையில் ஈடுபட்ட நிலையில், சிறுமி தனது குடும்ப உறுப்பினரிடம் இவ்விசயத்தை தெரிவித்துள்ளார்.  அதனை அடுத்து தான் சம்பவம் வெளியே தெரிய வந்துள்ளது.  அதன் பின்பு, 3 வருடங்கள் அவனுக்கு சிறுவர் சீர்திருத்த தண்டனை வழங்கப்பட்டது.  அவன் தனது குடும்பத்தினருடன் ஒன்றாக வீட்டில் இருப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.  மேலும், 2 1.2 வருடங்களுக்கு இவனொரு செக்ஸ் குற்றவாளி என பதிவு செய்யும்படியும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment