Thursday, 27 February 2014

சிறுமியை உயிருடன் எரிக்க முயற்சி : கர்நாடகாவில் போலி சாமியார் கைது

கர்நாடக மாநிலத்தில், 7 வயது சிறுமியை, உயிருடன் எரிக்க முயற்சித்த, போலி சாமியார் கைது செய்யப்பட்டார். பெல்காம் மாவட்டம், அப்பய்யா மடத்தை சேர்ந்த சாமியார், அப்பய்யா சாமி. இவர், அப்பகுதியை சேர்ந்த, சென்னப்பா கஸ்தூரி தம்பதியின், 7 வயது மகள், நிஜலிங்கம்மா தேவி. 'குடும்பத்தில் வறுமை போக வேண்டுமானால், சிறுமியை தன்னுடன், 21 நாள் பூஜைக்கு அனுப்பி வையுங்கள்' என, அந்த தம்பதியிடம், சாமியார் அப்பய்யா கூறி, பெற்றோர் சம்மதத்துடன் அழைத்து சென்றுள்ளார்.
அதன்படி, மடத்தின் கீழ்பகுதியிலுள்ள, குகை போன்ற இடத்தில், சிறுமியை வைத்து பூஜை செய்துள்ளார். இவ்வாறு, 21 நாள் பூஜை செய்து, சிவராத்திரி அன்று பூஜையை முடித்தால், வளங்கள் வந்து சேரும் என கூறி, அதன்படி செய்துள்ளார். இந்நிலையில், திடீரென, அந்த சிறுமியை படுக்க வைத்து, விறகு கட்டைகளை அடுக்கி, எரிக்க முயன்றுள்ளார். அதை பார்த்தவர்கள், போலீசுக்கு தகவல் தெரிவிக்கவே, போலீசார் வந்து, அந்த சிறுமியை மீட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி நிஜலிங்கம்மா தேவி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த மடத்திலிருந்த, மேலும், ஐந்து குழந்தைகள் மீட்கப்பட்டன.

No comments:

Post a Comment