Thursday, 27 February 2014

போக்குவரத்து நெரிசலுக்கு விடிவுகாலம் வந்தது : பண்ருட்டி ரயில்வே மேம்பாலத்திற்கு பூமி பூஜை

பண்ருட்டி : பண்ருட்டி - சென்னை சாலை ரயில்வே கேட்டிற்கு 23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.
பண்ருட்டி - சென்னை சாலையில் (வி.கே.டி., தேசிய நெடுஞ்சாலை) ரயில்வே கேட் அடிக்கடி மூடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும், அவசரத்திற்குச் செல்ல வேண்டிய ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டிகள் கூட நேரத்திற்கு சம்பவ இடத்திற்குச் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
இதனால், ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பொது நல அமைப்புகள் நீண்ட நாட்களாக வைத்த கோரிக்கையின் பேரில், கடந்த 2007ம் ஆண்டு ரயில்வே துறை மேம்பாலம் கட்ட அனுமதி அளித்தது.
அதனைத் தொடர்ந்து நகாய் சார்பில் பண்ருட்டி வி.கே.டி., சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்ட அனுமதியளித்தது. இதனையடுத்து தமிழக நெடுஞ்சாலைத்துறை பாலம் திட்டங்கள் துறை சார்பில் 23 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயார் செய்தது.
இந்த பாலம், எல்.என்.புரம் ஊராட்சி எல்லை வ.உ.சி., பஸ் ஸ்டாப்பில் இருந்து 50 மீட்டர் தொலைவில் மேம்பாலத்திற்கான ஜீரோ பாயிண்ட் துவங்கி 850 மீட்டர் தொலைவில் பண்ருட்டி நான்கு முனை சந்திப்பை அடைகிறது.
இதில் ஜீரோ பாயிண்ட்டில் இருந்து 114 மீட்டரிலிருந்து பாலம் ஏறுவதற்கான துவக்கம் துவங்கி, 762 மீட்டரில் மார்க்கெட் அருகில் இறங்குகிறது.
சாலையின் இருபுறமும் ஐந்தரை மீட்டர் அகலத்தில், சர்வீஸ் சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டது.
இதற்காக கடந்த சில மாதங்களாக ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்படாமல் தள்ளி போனது.
நீண்ட இழுபறிக்குப் பின் கடந்த வாரம் சென்னையில் துறை அதிகாரிகள் தலைமையில் நடந்த கூட்டத்தில், கடலூர்
சிவசுவாதி கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்திடம் பணி ஒப்படைக்கப்பட்டது.
இதனையடுத்து நேற்று ரயில்வே மேம்பாலப் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
இதில் நெடுஞ்சாலைத் துறை திட்டங்கள் உதவிக் கோட்டப் பொறியாளர் சிவக்குமார், உதவி பொறியாளர் மணிகண்டன், அ.தி.மு.க., ஒன்றிய பொருளாளர் பெருமாள், முன்னாள் ஊராட்சித் தலைவர் சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment