Sunday, 23 February 2014

பெரம்பூரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து வளையல் வியாபாரி படுகாயம்

பெரம்பூர், பிப். 23–பெரம்பூரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து வளையல் வியாபாரி படுகாயம்
பெரம்பூர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 39) வளையல் வியாபாரி. இவருக்கு ராதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
சம்பவத்தன்று கன்னியப்பன் வியாபாரத்துக்கு சென்றுவிட்டார். மனைவி ராதா குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். நேற்று கன்னியப்பன் வியாபாரம் முடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். வீட்டில் சமையல் கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டிருந்தது. இதை அறியாமல் கன்னியப்பன் மின் விளக்கை போட்டார். 
அப்போது, சிலிண்டர் ‘டமார்’ என்ற பயங்கர சத்தத்துடன் வெடித்து தீப்பிடித்தது. தீயில் சிக்கி கன்னியப்பன் படுகாயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது குறித்து செம்பியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உக்ரபாண்டியன் விசாரணை நடத்தி வருகிறார்.

No comments:

Post a Comment