பாட்னா பிப்.27-
பீகாரிலுள்ள முக்கிய கட்சியான ராம்விலாஸ் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி வருகிற மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைக்கப்போவதாக அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து அக்கட்சியின் துணைத்தலைவரும் சட்ட ஆலோசகருமான ஜாகிர் உசைன் கான் எம்.எல்.ஏ. நேற்று தனது கட்சி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதைப்பற்றி அவர் கூறுகையில், "லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் பா.ஜ.க உடனும் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி உடனும் கூட்டணி வைப்பதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் இனவாத அரசியலுக்கு துணைபோக பஸ்வான் சம்மதித்துவிட்டார். இதனால் நான் எனது கட்சி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன்" என்று தெரிவித்தார்.
பீகாரிலுள்ள முக்கிய கட்சியான ராம்விலாஸ் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி வருகிற மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைக்கப்போவதாக அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து அக்கட்சியின் துணைத்தலைவரும் சட்ட ஆலோசகருமான ஜாகிர் உசைன் கான் எம்.எல்.ஏ. நேற்று தனது கட்சி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதைப்பற்றி அவர் கூறுகையில், "லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் பா.ஜ.க உடனும் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி உடனும் கூட்டணி வைப்பதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் இனவாத அரசியலுக்கு துணைபோக பஸ்வான் சம்மதித்துவிட்டார். இதனால் நான் எனது கட்சி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன்" என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment