Thursday, 27 February 2014

சென்னையில் பிரசாரம் துவக்குகிறார் ஜெ.,:வேகமாக தயாராகும் பயண திட்டம்

லோக்சபா தேர்தல் தேதி, எந்த நேரத்திலும் அறிவிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே, நாடு முழுவதும் உள்ள, அனைத்து அரசியல் கட்சிகளும், தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. தமிழகத்தில், பெரும்பாலான கட்சிகளுக்கு, வரும் தேர்தல், வாழ்வா, சாவா பிரச்னையாக உள்ளது.

இந்தச் சூழலில், தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அ.தி.மு.க., கூட்டணி குறித்தெல்லாம் கவலைப்படாமல், தேர்தல் பணிகளை துவக்கி விட்டது. உள்ளாட்சி பதவிகளில், 80 சதவீதத்திற்கும் மேல், அ.தி.மு.க.,வினரே உள்ளனர். கூட்டுறவு சங்கங்களிலும், அ.தி.மு.க.,வினரே பதவி வகிக்கின்றனர். நிர்வாகிகளில் பெரும்பாலானோர், ஏதேனும் ஒரு பதவியில் உள்ளனர்.அதனால், லோக்சபா தேர்தலில், தமிழகம், புதுவை உட்பட, 40 தொகுதிகளையும், எப்படியும் கைப்பற்றி விட வேண்டும் என, தீர்மானித்து செயல்பட்டு வருகிறது.
மத்தியில், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.,வுக்கு, தனி பெரும்பான்மை கிடைக்காவிட்டால், அதிக சீட்டுகளை பெறுவதன் அடிப்படையில், அனைவரும், அ.தி.மு.க., பக்கம் திரும்புவர். முதல்வர் ஜெயலலிதா, பிரதமராக வாய்ப்பு கிடைக்கும் என, அ.தி.மு.க.,வினர் நம்புகின்றனர். அதனால், அவரை, பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி, அ.தி.மு.க., தேர்தல் பணிகளை துவக்கி விட்டது.

No comments:

Post a Comment