வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் மின்சாதனங்களை பொதுமக்கள் எச்சரிக்கையுடன் பயன்படுத்த மின்ஆய்வுத்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து மின்ஆய்வுத்துறை அரசுத் தலைமை மின் ஆய்வாளர் எஸ்.அப்பாவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முன்னெச்சரிக்கை
வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் மின்சாரம் தொடர்பான அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அதன்படி மின்சார ஒயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்றுள்ள மின் ஒப்பந்தக்காரர் மூலமாக மட்டுமே செய்வதுடன், ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற தரமான மின்சார சாதனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
மின்சார பிளக்குகளைப் பொருத்துவதற்கு முன்னரும், எடுப்பதற்கு முன்னரும் சுவிட்சை ‘ஆப்’ செய்துவிட வேண்டும்.
கேபிள் டிவி வயர்கள்
குளிர்சாதன பெட்டி, கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின்சாதனங்களுக்கு, நில இணைப்புடன் (எர்த்) கூடிய மூன்று பின் சாக்கெட் உள்ள பிளக்குகள் மூலமாக மின் இணைப்பு கொடுக்க வேண்டும். இதனை குழந்தைகள் மற்றும் விலங்குகள் தொடாத வகையில் அமைக்க வேண்டும். மின்கசிவு தடுப்பானை பயனீட்டாளரின் இல்லங்களில் உள்ள மெயின் ஸ்விட்ச் போர்டில் பொருத்தி மின்கசிவினால் ஏற்படும் மின்விபத்தை தவிர்க்கலாம். கேபிள் டிவி வயர்களை மேல்நிலை கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்ல வேண்டாம். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வீட்டின் ஒயரிங்குகளை சோதனை செய்து தேவைப்பட்டால் மாற்றிக் கொள்ள வேண்டும்.
மின்சார கம்பத்துக்கு போடப்பட்டுள்ள ஸ்டே கம்பியின் மீது, கயிறு கட்டி துணி காயவைப்பதை தவிர்க்க வேண்டும். குளியலறையிலும், கழிப்பறையிலும் ஈரமான இடங்களிலும் சுவிட்சுகளைப் பொருத்த வேண்டாம்.
இடி, மின்னல்
மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்சார வாரியத்தின் அலுவலர்களை அணுக வேண்டும். மின்சாதனங்களில் தீப்பிடித்தால் தீயணைப்பான்கள், உலர்ந்த மணல், கம்பளிப் போர்வை, உலர்ந்த ரசாயனப் பொடி அல்லது கரியமில வாயு ஆகிய தீயணைப்பான்களை பயன்படுத்த வேண்டும். மாறாக தண்ணீரை கொண்டு அணைக்க முயற்சிக்க வேண்டாம்.
இடி, மின்னலின் போது குடிசை வீடு, மரத்தின் அடியில், பஸ் நிறுத்தம் மற்றும் வெட்ட வெளி பகுதி, தண்ணீர் தேங்கியுள்ள பகுதியில் இருக்காமல், கான்கிரீட் கூரையிலான பெரிய கட்டிடம், அல்லது உலோகத்தால் மேலே மூடப்பட்ட வாகனங்களில் தஞ்சமடையலாம். இடி, மின்னல் நேரத்தில் டிவி, மிக்ஸி, கணினி, தொலைபேசிகளை பயன்படுத்த வேண்டாம். மழைக்காலமாக இருப்பதால் மின்சாதனங்களை எச்சரிக்கையுடன் பொதுமக்கள் கையாள வேண்டும்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்
இதுகுறித்து மின்ஆய்வுத்துறை அரசுத் தலைமை மின் ஆய்வாளர் எஸ்.அப்பாவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முன்னெச்சரிக்கை
வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் மின்சாரம் தொடர்பான அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அதன்படி மின்சார ஒயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்றுள்ள மின் ஒப்பந்தக்காரர் மூலமாக மட்டுமே செய்வதுடன், ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற தரமான மின்சார சாதனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
மின்சார பிளக்குகளைப் பொருத்துவதற்கு முன்னரும், எடுப்பதற்கு முன்னரும் சுவிட்சை ‘ஆப்’ செய்துவிட வேண்டும்.
கேபிள் டிவி வயர்கள்
குளிர்சாதன பெட்டி, கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின்சாதனங்களுக்கு, நில இணைப்புடன் (எர்த்) கூடிய மூன்று பின் சாக்கெட் உள்ள பிளக்குகள் மூலமாக மின் இணைப்பு கொடுக்க வேண்டும். இதனை குழந்தைகள் மற்றும் விலங்குகள் தொடாத வகையில் அமைக்க வேண்டும். மின்கசிவு தடுப்பானை பயனீட்டாளரின் இல்லங்களில் உள்ள மெயின் ஸ்விட்ச் போர்டில் பொருத்தி மின்கசிவினால் ஏற்படும் மின்விபத்தை தவிர்க்கலாம். கேபிள் டிவி வயர்களை மேல்நிலை கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்ல வேண்டாம். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வீட்டின் ஒயரிங்குகளை சோதனை செய்து தேவைப்பட்டால் மாற்றிக் கொள்ள வேண்டும்.
மின்சார கம்பத்துக்கு போடப்பட்டுள்ள ஸ்டே கம்பியின் மீது, கயிறு கட்டி துணி காயவைப்பதை தவிர்க்க வேண்டும். குளியலறையிலும், கழிப்பறையிலும் ஈரமான இடங்களிலும் சுவிட்சுகளைப் பொருத்த வேண்டாம்.
இடி, மின்னல்
மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்சார வாரியத்தின் அலுவலர்களை அணுக வேண்டும். மின்சாதனங்களில் தீப்பிடித்தால் தீயணைப்பான்கள், உலர்ந்த மணல், கம்பளிப் போர்வை, உலர்ந்த ரசாயனப் பொடி அல்லது கரியமில வாயு ஆகிய தீயணைப்பான்களை பயன்படுத்த வேண்டும். மாறாக தண்ணீரை கொண்டு அணைக்க முயற்சிக்க வேண்டாம்.
இடி, மின்னலின் போது குடிசை வீடு, மரத்தின் அடியில், பஸ் நிறுத்தம் மற்றும் வெட்ட வெளி பகுதி, தண்ணீர் தேங்கியுள்ள பகுதியில் இருக்காமல், கான்கிரீட் கூரையிலான பெரிய கட்டிடம், அல்லது உலோகத்தால் மேலே மூடப்பட்ட வாகனங்களில் தஞ்சமடையலாம். இடி, மின்னல் நேரத்தில் டிவி, மிக்ஸி, கணினி, தொலைபேசிகளை பயன்படுத்த வேண்டாம். மழைக்காலமாக இருப்பதால் மின்சாதனங்களை எச்சரிக்கையுடன் பொதுமக்கள் கையாள வேண்டும்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்
No comments:
Post a Comment