சென்னை, அக், 29–
தமிழ்நாடு டாஸ்மாக் பார் கட்டிட உரிமையாளர் மற்றும் தொழிலாளர் நலச்சங்கத்தின் சார்பில் நாளை மறுநாள் (31–ந்தேதி) சென்னை அண்ணா சாலை மின்வாரிய அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இதில் பார் ஏலத்தில், விண்ணப்ப படிவத்தில் கட்டிட உரிமையாளரின் தடையில்லா சான்று அவசியம் என்பதை தெரிவிக்க வேண்டும், பார் விற்பனைக்கு ஏற்ப வளர்ச்சி விகித சதவீதம் நிர்ணயிப்பதை ரத்து செய்ய வேண்டும். மாதாந்திர பார் உரிமை தொகையை செலுத்தும் போது கால தாமதம் என கூறி 12 சதவீத வட்டி வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும், இரவு 10.30 மணி வரையில் டாஸ்மாக் பார் கால அவகாசத்தை நீட்டித்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் இந்த ஆர்பாட்டத்தில் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இது தொடர்பாக டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பரசன் கூறும்போது, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாளை மறுநாள் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள், தொழிலாளர்கள் அனைவரும் திரளாக பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு டாஸ்மாக் பார் கட்டிட உரிமையாளர் மற்றும் தொழிலாளர் நலச்சங்கத்தின் சார்பில் நாளை மறுநாள் (31–ந்தேதி) சென்னை அண்ணா சாலை மின்வாரிய அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இதில் பார் ஏலத்தில், விண்ணப்ப படிவத்தில் கட்டிட உரிமையாளரின் தடையில்லா சான்று அவசியம் என்பதை தெரிவிக்க வேண்டும், பார் விற்பனைக்கு ஏற்ப வளர்ச்சி விகித சதவீதம் நிர்ணயிப்பதை ரத்து செய்ய வேண்டும். மாதாந்திர பார் உரிமை தொகையை செலுத்தும் போது கால தாமதம் என கூறி 12 சதவீத வட்டி வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும், இரவு 10.30 மணி வரையில் டாஸ்மாக் பார் கால அவகாசத்தை நீட்டித்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் இந்த ஆர்பாட்டத்தில் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இது தொடர்பாக டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பரசன் கூறும்போது, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாளை மறுநாள் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள், தொழிலாளர்கள் அனைவரும் திரளாக பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment