Friday, 31 October 2014

மோட்டார் சைக்கிள் மோதி படுகாயம் அடைந்தவருக்கு ரூ.3.5 லட்சம் இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை,
சென்னை பெரம்பூர், பெரியார் நகரை சேர்ந்தவர் சீனிவாசன். தனியார் நிறுவன அதிகாரி. இவர், கடந்த 2009–ம் ஆண்டு ஆகஸ்டு 9–ந் தேதி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர். அப்போது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிளில் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில், சீனிவாசன் படுகாயம் அடைந்தார். இதையடுத்து தன் மீது மோதிய மோட்டார் சைக்கிள் காப்பீடு செய்து இருந்த யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.10 லட்சம் இழப்பீடு கேட்டு சென்னையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் சீனிவாசன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெ.சந்திரன், ‘விபத்தில் படுகாயமடைந்த சீனிவாசனுக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.3.5 லட்சம் இழப்பீடாக வழங்கவேண்டும்’ என்று தீர்ப்பளித்தார்.

No comments:

Post a Comment