Friday, 31 October 2014

கருப்பு பண விவகாரம்: சிறப்பு புலனாய்வு குழுவுக்கு ஆலோசகர் நியமனம்



புதுடெல்லி,

கருப்பு பண விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் சிறப்பு புலனாய்வு குழுவின் ஆலோசகராக இந்திய வருவாய் பணியின் மூத்த அதிகாரி கே.வி.சவுத்ரியை மத்திய அரசு நியமித்துள்ளது.

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களால் குவிக்கப்பட்டுள்ள கருப்பு பண விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்கீழ், நீதிபதி எம்.பி. ஷாவை தலைவராகவும், நீதிபதி அரிஜித் பசாயத்தை துணைத்தலைவராகவும் 11 உறுப்பினர்களையும் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்தக் குழு தனது விசாரணையை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் சிறப்பு புலனாய்வு குழுவின் ஆலோசகராக இந்திய வருவாய் பணியின் மூத்த அதிகாரி கே.வி.சவுத்ரியை மத்திய அரசு நியமித்துள்ளது. இவர் ‘சி.டி.பி.டி.’ என்னும் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இவர் கருப்பு பண விவகாரத்தை நீண்ட காலமாக கையாண்டு வந்ததாலும், அது தொடர்பான ஆலோசனைகளிலும் பங்கேற்று வந்திருப்பதாலும், சிறப்பு புலனாய்வு குழுவில் அவர் தொடர வேண்டும் என்று மத்திய அரசும், சிறப்பு புலனாய்வு குழுவும் விரும்பியதின் பேரில் இந்த நியமனம் செய்யப்பட்டிருப்பதாக மத்திய நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment