சென்னை,
கோவில் நிலத்துக்கு இழப்பீடு வழங்காததால் சென்னை கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக வந்த தகவலால் கலெக்டர் அலுவலகம் நேற்று பரபரப்புடன் காணப்பட்டது.
சென்னை கலெக்டர் அலுவலகம் ஜப்தி?
சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அலுவலக பொருட்கள் நேற்று ஜப்தி செய்யப்பட இருப்பதாக தகவல் பரவியது. இதனை அடுத்து பத்திரிகையாளர்கள், டிவி நிருபர்கள் அங்கு குவிந்தனர். இதனால் அலுவலக ஊழியர்களும், தங்கள் அலுவலக பொருட்கள் ஜப்தி செய்யப்பட உள்ளது என்று தெரிந்த உடன் பரபரப்புக்கு உள்ளானார்கள்.
கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்களும் ஜப்தி நடவடிக்கையை அறிந்து, திகைத்து நின்றனர். அலுவலகத்துக்கு வந்தவர்களை பாதுகாவலர்கள் தீவிரமாக விசாரணை செய்த பின்னரே அலுவலகத்துக்கு உள்ளே செல்ல அனுமதித்தனர். இதனால் கலெக்டர் அலுவலக சாலையும் பரபரப்பாக காணப்பட்டது.
பகல் 1 மணி அளவில் அவ்வாறு எந்த ஜப்தி நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கலெக்டர் அலுவலக அதிகாரிகள் கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:-
கோவில் நிலத்துக்கு இழப்பீடு
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வெங்கீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதி, நெடுஞ்சாலை துறை தேவைக்காக, சென்னை பெருநகர குழுமம் கையகப்படுத்தி கொடுத்துள்ளது. இதற்காக ரூ.37 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. இந்த தொகையை குறிப்பிட்ட காலத்தில் வழங்கவில்லை.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட தாசில்தாரை அணுகி விவரம் கேட்க சென்ற போது, அவர்களால் அதிகாரிகளை சந்திக்க முடியவில்லை. இதனால் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து நவம்பர் 6-ந்தேதிக்குள் பணத்தை வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் அலுவலகத்தில் உள்ள கணினி, மின்விசிறி, மேஜை, நாற்காலி, பிரோ போன்றவை ஜப்தி செய்யப்படும் என்று உத்தரவிட்டது.
கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால் இழப்பீடு தொகை வழங்கப்படும். அதற்குள் கலெக்டர் அலுவலகம் ஜப்தி செய்யப்படும் என்று தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கும், கலெக்டர் அலுவலகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
கோவில் நிலத்துக்கு இழப்பீடு வழங்காததால் சென்னை கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக வந்த தகவலால் கலெக்டர் அலுவலகம் நேற்று பரபரப்புடன் காணப்பட்டது.
சென்னை கலெக்டர் அலுவலகம் ஜப்தி?
சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அலுவலக பொருட்கள் நேற்று ஜப்தி செய்யப்பட இருப்பதாக தகவல் பரவியது. இதனை அடுத்து பத்திரிகையாளர்கள், டிவி நிருபர்கள் அங்கு குவிந்தனர். இதனால் அலுவலக ஊழியர்களும், தங்கள் அலுவலக பொருட்கள் ஜப்தி செய்யப்பட உள்ளது என்று தெரிந்த உடன் பரபரப்புக்கு உள்ளானார்கள்.
கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்களும் ஜப்தி நடவடிக்கையை அறிந்து, திகைத்து நின்றனர். அலுவலகத்துக்கு வந்தவர்களை பாதுகாவலர்கள் தீவிரமாக விசாரணை செய்த பின்னரே அலுவலகத்துக்கு உள்ளே செல்ல அனுமதித்தனர். இதனால் கலெக்டர் அலுவலக சாலையும் பரபரப்பாக காணப்பட்டது.
பகல் 1 மணி அளவில் அவ்வாறு எந்த ஜப்தி நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கலெக்டர் அலுவலக அதிகாரிகள் கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:-
கோவில் நிலத்துக்கு இழப்பீடு
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வெங்கீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதி, நெடுஞ்சாலை துறை தேவைக்காக, சென்னை பெருநகர குழுமம் கையகப்படுத்தி கொடுத்துள்ளது. இதற்காக ரூ.37 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. இந்த தொகையை குறிப்பிட்ட காலத்தில் வழங்கவில்லை.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட தாசில்தாரை அணுகி விவரம் கேட்க சென்ற போது, அவர்களால் அதிகாரிகளை சந்திக்க முடியவில்லை. இதனால் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து நவம்பர் 6-ந்தேதிக்குள் பணத்தை வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் அலுவலகத்தில் உள்ள கணினி, மின்விசிறி, மேஜை, நாற்காலி, பிரோ போன்றவை ஜப்தி செய்யப்படும் என்று உத்தரவிட்டது.
கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால் இழப்பீடு தொகை வழங்கப்படும். அதற்குள் கலெக்டர் அலுவலகம் ஜப்தி செய்யப்படும் என்று தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கும், கலெக்டர் அலுவலகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
No comments:
Post a Comment