Friday, 31 October 2014

வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்க உத்தரவு மேயர் சைதை துரைசாமி நடவடிக்கை


சென்னை,
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–
கடந்த வாரத்தில் பெய்து வந்த வடகிழக்கு பருவமழையால், நேற்று வரை, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சியின் பராமரிப்பில் உள்ள மழைநீரால் பாதிக்கப்பட்ட சாலைகளை செப்பனிடும் பணி மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது.
மேலும், வடகிழக்கு பருவ மழையினால் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தொற்று நோய்கள் பரவாமல் இருக்க தொடர் நடவடிக்கையாக பல்வேறு பணிகள் பொதுசுகாதாரத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, அனைத்து மண்டலங்களிலும் நேற்று குடிசை பகுதிகளில் 36 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. இதில் 3144 பேர்கள் பயனடைந்துள்ளனர். மொத்தம் இதுவரையில் 185 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 13,632 பேர்கள் பயனடைந்துள்ளனர். மருத்துவ முகாம்களில் நோய் அறிகுறிகளில் கண்டறியப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment