Friday, 31 October 2014

விஜயகாந்த் பற்றி அவதூறு சுவரொட்டி ஒட்டியவர் கைது

அம்பத்தூர்,
சென்னை கொரட்டூர் மூர்த்தி நகரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜி(வயது 29). அ.தி.மு.க.வைச் சேர்ந்த இவர், நேற்று கொரட்டூர் பகுதியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பற்றி அவதூறான வார்த்தைகள் கொண்ட சுவரொட்டியை ஒட்டியதாக கூறப்படுகிறது.
இது பற்றிய தகவல் அறிந்த சென்னை மேற்கு மாவட்ட தே.மு.தி.க. துணை செயலாளரான கொரட்டூர் ரெயில் நிலைய ரோட்டைச் சேர்ந்த செந்தில்குமார்(42) என்பவர் கொரட்டூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகாந்த் பற்றி அவதூறு சுவரொட்டி ஓட்டியதாக கோவிந்தராஜை கைது செய்தனர்.

Admagnet - X

No comments:

Post a Comment