தாம்பரம்,
தாம்பரத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சம்பவ இடத்தில் கமிஷனர் ஜார்ஜ் நேரில் ஆய்வு செய்தார்.

இரு தரப்பினர் மோதல்
சென்னையை அடுத்த தாம்பரம் மார்க்கெட் பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட தலைவர் யாக்கூப், செருப்பு கடை நடத்தி வருகிறார். இவர் தரப்பினருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருசக்கர வாகனம் நிறுத்தி இருந்தது தொடர்பாக தகராறு ஏற்பட்டு இரு தரப்பிலும் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இவர்களுக்குள் மீண்டும் மோதல் ஏற்படும் என்ற தகவல் கிடைத்ததால் தாம்பரம் பகுதியில் கடந்த சில நாட்களாக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு காரில் வந்த ஒரு கும்பல், யாக்கூப் தரப்பினரை அரிவாளால் வெட்டினர். இதில் 3 பேர் காயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தகராறில் எதிர் தரப்பினர் 4 பேரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக இரு தரப்பினரின் புகாரையும் பெற்று, தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கமிஷனர் ஆய்வு
இதையடுத்து இரு தரப்பினர் இடையே மேலும் மோதல் ஏற்படாமல் தடுக்க தாம்பரம் மார்க்கெட் பகுதி ரங்கநாதபுரம், காந்தி ரோடு, கஸ்தூரிபாய்நகர் பகுதிகளில் ஏராளமான போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று காலை தாம்பரம் வந்த சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்.
தாம்பரம் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அவர் ஆய்வு செய்தார்.
தாம்பரத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சம்பவ இடத்தில் கமிஷனர் ஜார்ஜ் நேரில் ஆய்வு செய்தார்.
இரு தரப்பினர் மோதல்
சென்னையை அடுத்த தாம்பரம் மார்க்கெட் பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட தலைவர் யாக்கூப், செருப்பு கடை நடத்தி வருகிறார். இவர் தரப்பினருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருசக்கர வாகனம் நிறுத்தி இருந்தது தொடர்பாக தகராறு ஏற்பட்டு இரு தரப்பிலும் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இவர்களுக்குள் மீண்டும் மோதல் ஏற்படும் என்ற தகவல் கிடைத்ததால் தாம்பரம் பகுதியில் கடந்த சில நாட்களாக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு காரில் வந்த ஒரு கும்பல், யாக்கூப் தரப்பினரை அரிவாளால் வெட்டினர். இதில் 3 பேர் காயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தகராறில் எதிர் தரப்பினர் 4 பேரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக இரு தரப்பினரின் புகாரையும் பெற்று, தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கமிஷனர் ஆய்வு
இதையடுத்து இரு தரப்பினர் இடையே மேலும் மோதல் ஏற்படாமல் தடுக்க தாம்பரம் மார்க்கெட் பகுதி ரங்கநாதபுரம், காந்தி ரோடு, கஸ்தூரிபாய்நகர் பகுதிகளில் ஏராளமான போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று காலை தாம்பரம் வந்த சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்.
தாம்பரம் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அவர் ஆய்வு செய்தார்.
No comments:
Post a Comment