Friday, 31 October 2014

தலைமைச் செயலாளர் கார் மீது மோட்டார் சைக்கிள் மோதல் சென்னை மெரினாவில் பரபரப்பு

சென்னை,
தமிழக தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் நேற்று காலையில் தனது காரில் கோட்டைக்கு சென்று கொண்டிருந்தார். கார் மெரினாவில் கண்ணகி சிலை சிக்னலில் நின்றது. அப்போது பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள், கார் மீது மோதிவிட்டது. கார் லேசாக சேதம் அடைந்தது. பின்னர் தலைமைச் செயலாளரின் கார் போய்விட்டது.
மோட்டார் சைக்கிளை கொடுங்கையூரைச் சேர்ந்த பத்மநாபன் (வயது 37) என்பவர் ஓட்டி வந்தார். அவர் காரில் மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்து லேசான காயம் அடைந்தார். அவரை அண்ணாசதுக்கம் போக்குவரத்து போலீசார் பிடித்துச் சென்று விசாரணை நடத்தினார்கள்.
காரை திடீரென்று பிரேக் போட்டு நிறுத்திவிட்டதால், நான் மோட்டார் சைக்கிளை கார் மீது மோதிவிட்டேன் என்று பத்மநாபன் போலீஸ் விசாரணையில் தெரிவித்தார். அவரை நேற்று மாலை வரை காவலில் வைத்து அண்ணாசதுக்கம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதன்பிறகு அவரை எச்சரித்து போலீசார் அனுப்பி வைத்தனர்.

No comments:

Post a Comment