Friday, 31 October 2014

கோவையில் பறவை மோதியதால் 120 பேருடன் சார்ஜா சென்ற விமானம் திடீர் தரையிறக்கம்


கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் அரேபியா நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு விமானம் இன்று அதிகாலை 4.45 மணியளவில் வளைகுடா நாடுகளில் ஒன்றான சார்ஜாவுக்கு புறப்பட்டுச் சென்றது.

ஓடுபாதையில் இருந்து உயரக் கிளம்பியபோது, விமானத்தின் எஞ்சின் பகுதி மீது எதிர்திசையில் இருந்துவந்த ஒரு பறவை மோதியது. இதை கவனித்துவிட்ட விமானி, உடனடியாக அந்த விமானத்தை கோவை விமான நிலையத்தில் தரையிறக்கினார்.

அந்த விமானத்தில் பயணிக்க இருந்த 120 பேரும் கோவை நகரில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். உரிய பரிசோதனைகளுக்கு பின்னர் அந்த விமானம் சார்ஜாவிற்கு புறப்பட்டுச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment