வேகமாக பரவும் மெட்ராஸ் ஐ: எழும்பூர் ஆஸ்பத்திரியில் தினமும் 100 பேருக்கு சிகிச்சை
சென்னை, அக். 30–
கோடை காலத்தில் மே, ஜூன், ஜூலை மாதங்களில் மட்டுமே பரவும் ‘மெட்ராஸ் ஐ’ கண் நோய், சென்னையில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
எப்போதும் இல்லாத வகையில் மழைக்காலத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கண் நோய், சென்னையில் அனைத்து பகுதிகளிலும் பாரபட்சமின்றி பரவிக் கிடக்கிறது. இதனால் சென்னையில் பலர் கண்ணாடி அணிந்தபடியே வலம் வருகிறார்கள்.
ஒருவிதமான வைரஸ் மூலமாகவே, பரவும் ‘மெட்ராஸ் ஐ’ கண்நோய் பாதிக்கப்பட்டவர்கள் கடுமையான அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
3 நாட்கள் வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே ஓய்வு எடுத்தால் ‘மெட்ராஸ் நோய்’ கண் நோய் குணமாகி விடும். ஆனால் தற்போது பரவி வரும் ‘மெட்ராஸ் ஐ’ நோயின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. 10 நாட்கள் வரை இதன் பாதிப்பு இருக்கிறது.
கண் நோயை ஏற்படுத்தும் வைரசின் வீரியம் அதிகமாகி இருப்பதே இதற்கு காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
‘மெட்ராஜ் ஐ’–யால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள், டாக்டர்களிடம் சென்று கண் பரிசோதனை செய்து கொள்வதில்லை. இதற்கு மாறாக மருந்து கடைகளில் ஏதாவது ஒரு மருந்தை வாங்கி கண்களில் ஊற்றிக் கொள்கிறார்கள்.
இது போன்று செய்வதால் பக்க விளைவுகள் ஏற்பட்டு கண் பார்வை பாதிக்கப்படும் அபாயமும் இருப்பதாக டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள்.
எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனைக்கு நோய் பாதிப்பு அதிகமான பின்னரே பலர் சிகிச்சைக்கு செல்கிறார்கள். தினமும் 100 பேர் வரை இங்கு சிகிச்சை பெறுகிறார்கள். அரசு ஆஸ்பத்திரியில் கண் நோய்க்கான மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை சரி செய்யும் முயற்சியில் மருத்துவமனை நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.
மழைக்காலத்தில் கண் நோய் பரவுவது ஏன்? என்பது பற்றியும் ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக கண் நோய் பாதிப்புடன் வரும் நோயாளிகளிடமிருந்து, நோய் பாதிப்பு மாதிரிகளை சேகரிக்கும் பணியில் டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த பணியை மேலும் சில நாட்கள் தொடர ஆஸ்பத்திரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதன் பின்னர், இந்த மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பி கண் நோய்க்கான காரணத்தை கண்டறியவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கோடை காலத்தில் மே, ஜூன், ஜூலை மாதங்களில் மட்டுமே பரவும் ‘மெட்ராஸ் ஐ’ கண் நோய், சென்னையில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
எப்போதும் இல்லாத வகையில் மழைக்காலத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கண் நோய், சென்னையில் அனைத்து பகுதிகளிலும் பாரபட்சமின்றி பரவிக் கிடக்கிறது. இதனால் சென்னையில் பலர் கண்ணாடி அணிந்தபடியே வலம் வருகிறார்கள்.
ஒருவிதமான வைரஸ் மூலமாகவே, பரவும் ‘மெட்ராஸ் ஐ’ கண்நோய் பாதிக்கப்பட்டவர்கள் கடுமையான அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
3 நாட்கள் வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே ஓய்வு எடுத்தால் ‘மெட்ராஸ் நோய்’ கண் நோய் குணமாகி விடும். ஆனால் தற்போது பரவி வரும் ‘மெட்ராஸ் ஐ’ நோயின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. 10 நாட்கள் வரை இதன் பாதிப்பு இருக்கிறது.
கண் நோயை ஏற்படுத்தும் வைரசின் வீரியம் அதிகமாகி இருப்பதே இதற்கு காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
‘மெட்ராஜ் ஐ’–யால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள், டாக்டர்களிடம் சென்று கண் பரிசோதனை செய்து கொள்வதில்லை. இதற்கு மாறாக மருந்து கடைகளில் ஏதாவது ஒரு மருந்தை வாங்கி கண்களில் ஊற்றிக் கொள்கிறார்கள்.
இது போன்று செய்வதால் பக்க விளைவுகள் ஏற்பட்டு கண் பார்வை பாதிக்கப்படும் அபாயமும் இருப்பதாக டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள்.
எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனைக்கு நோய் பாதிப்பு அதிகமான பின்னரே பலர் சிகிச்சைக்கு செல்கிறார்கள். தினமும் 100 பேர் வரை இங்கு சிகிச்சை பெறுகிறார்கள். அரசு ஆஸ்பத்திரியில் கண் நோய்க்கான மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை சரி செய்யும் முயற்சியில் மருத்துவமனை நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.
மழைக்காலத்தில் கண் நோய் பரவுவது ஏன்? என்பது பற்றியும் ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக கண் நோய் பாதிப்புடன் வரும் நோயாளிகளிடமிருந்து, நோய் பாதிப்பு மாதிரிகளை சேகரிக்கும் பணியில் டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த பணியை மேலும் சில நாட்கள் தொடர ஆஸ்பத்திரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதன் பின்னர், இந்த மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பி கண் நோய்க்கான காரணத்தை கண்டறியவும் திட்டமிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment