Thursday, 30 October 2014

ரூ. 50 லட்சம் பண மோசடி: வாலிபர் கைது

சென்னையில் ரூ. 50 லட்சம் பண மோசடி: வாலிபர் கைது
சென்னை, அக். 30–
சென்னை ஜாபர்கான் கோட்டையை சேர்ந்தவர் அரசு. இவர் குன்றத்தூரில் உள்ள தாய்மூகாம்பிகை கோவிலுக்கு அடிக்கடி சென்று வந்தார். அப்போது அந்த கோவில் நிர்வாகி சாந்தம்மாள் அவரது மகன் கார்த்திக் ஆகியோரிடம் பழக்கம் ஏற்பட்டது. கோவிலை நிர்வகிக்க சாந்தம்மாளும், கார்த்திக்கும் அரசுவிடம் ரூ. 50 லட்சம் கேட்டனர். அரசு ரூ. 50 லட்சம் கொடுத்தார்.
பின்னர் அரசு பணத்தை கேட்ட போது காந்தம்மாள் தனக்கு சொந்தமான 10 செனட் நிலத்தை தருவதாக கூறினார். ஆனால் நிலத்தையும் தரவில்லை. பணத்தையும் தரவில்லை. அரசு பணத்தை கேட்டதால் சாந்தம்மாளும், கார்த்திக்கும் சேர்ந்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து அரசு கமிஷனர் ஜார்ஜிடம் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் கூடுதல் கமிஷனர் நல்லசிவம் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் செல்வகுமார் மேற்பார்வையில் மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துவேல்பாண்டி ரூ. 50 லட்சம் மோசடி செய்த கார்த்திக்கை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

No comments:

Post a Comment