சென்னை, அக்.30–
செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காஞ்சி கிழக்கு மாவட்ட தலைவர் அமல்ராஜ் தலைமை தாங்கினார். உத்திரகுமார் பாபு, பக்தவச்சலம், செல்வ மூர்த்தி முன்னிலை வகித்தனர்.
இதில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா ஆயிரக்கணக்கான வியாபாரிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். அப்போது விக்கிரமராஜா பேசியதாவது:–
சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலித்தால் சாலைகளை செப்பனிட வேண்டும். மருத்துவ வசதி செய்து தர வேண்டும். ஆனால் எதுவுமே செய்யாமல் அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள்.
இதை கண்டித்து மத்திய மந்திரி நிதின் கட்காரியிடம் மனு கொடுத்துள்ளோம். பரனூர் சுங்கச்சாவடியில் இஷ்டத்துக்கு கட்டணம் வசூலிக்கிறார்கள். இந்த சுங்கச்சாவடியை அரசு இழுத்து மூட வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் ஓயாது.
இவ்வாறு விக்கிரமராஜா பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் செய்தி தொடர்பாளர் பாண்டிய ராஜன், மாநில துணைத் தலைவர்கள் வி.பி.மணி, ஆவடி அய்யார்பவன் அய்யாத்துரை, ஆலந்தூர் கணேசன், மண்டல தலைவர் சதக்கத்துல்லா, மாவட்ட தலைவர்கள் அமல்ராஜ், என்.டி.மோகன், ஜோதியார், மாரித்தங்கம், ஜெயபால், ஆதிகுருசாமி, மாவட்ட நிர்வாகிகள் அம்பத்தூர் ஹாஜி முகம்மது, மகாலிங்கம், பொன்பாண்டியன், கந்தராஜ், பால்ஆசீர் பாலகிருஷ்ணன், அயனாவரம் சாமுவேல், தேசிகன், சின்னவன், அடையார் பாஸ்கர், கோவிந்தராஜ், துரை, சுப்பிரமணியம், ஆர்.எம்.பழனியப்பன், கோவிலம்பாக்கம் பொன் ராஜ், பழம்பொருள் அணி அமைப்பாளர் இ.எம்.ஜெயக்குமார், தென் சென்னை தெற்கு மாவட்ட தலைவர் பூவை ஜெயக்குமார், அயூப்கான், மதுரவாயல் குமார், கோபால், செந்தில், ஜெயக்குமார், குன்றத்தூர் ஜெகதீஷ், ஊரப்பாக்கம் முருகன், செங்கல்பட்டு பால்ராஜ், செல்வராஜ், தாமோதரன், முத்துராஜ், மதுராந்தகம் முகமதுஅலி, சக்திகுமார், பிரபாகர் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இதில் லாரி, வேன் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காஞ்சி கிழக்கு மாவட்ட தலைவர் அமல்ராஜ் தலைமை தாங்கினார். உத்திரகுமார் பாபு, பக்தவச்சலம், செல்வ மூர்த்தி முன்னிலை வகித்தனர்.
இதில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா ஆயிரக்கணக்கான வியாபாரிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். அப்போது விக்கிரமராஜா பேசியதாவது:–
சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலித்தால் சாலைகளை செப்பனிட வேண்டும். மருத்துவ வசதி செய்து தர வேண்டும். ஆனால் எதுவுமே செய்யாமல் அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள்.
இதை கண்டித்து மத்திய மந்திரி நிதின் கட்காரியிடம் மனு கொடுத்துள்ளோம். பரனூர் சுங்கச்சாவடியில் இஷ்டத்துக்கு கட்டணம் வசூலிக்கிறார்கள். இந்த சுங்கச்சாவடியை அரசு இழுத்து மூட வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் ஓயாது.
இவ்வாறு விக்கிரமராஜா பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் செய்தி தொடர்பாளர் பாண்டிய ராஜன், மாநில துணைத் தலைவர்கள் வி.பி.மணி, ஆவடி அய்யார்பவன் அய்யாத்துரை, ஆலந்தூர் கணேசன், மண்டல தலைவர் சதக்கத்துல்லா, மாவட்ட தலைவர்கள் அமல்ராஜ், என்.டி.மோகன், ஜோதியார், மாரித்தங்கம், ஜெயபால், ஆதிகுருசாமி, மாவட்ட நிர்வாகிகள் அம்பத்தூர் ஹாஜி முகம்மது, மகாலிங்கம், பொன்பாண்டியன், கந்தராஜ், பால்ஆசீர் பாலகிருஷ்ணன், அயனாவரம் சாமுவேல், தேசிகன், சின்னவன், அடையார் பாஸ்கர், கோவிந்தராஜ், துரை, சுப்பிரமணியம், ஆர்.எம்.பழனியப்பன், கோவிலம்பாக்கம் பொன் ராஜ், பழம்பொருள் அணி அமைப்பாளர் இ.எம்.ஜெயக்குமார், தென் சென்னை தெற்கு மாவட்ட தலைவர் பூவை ஜெயக்குமார், அயூப்கான், மதுரவாயல் குமார், கோபால், செந்தில், ஜெயக்குமார், குன்றத்தூர் ஜெகதீஷ், ஊரப்பாக்கம் முருகன், செங்கல்பட்டு பால்ராஜ், செல்வராஜ், தாமோதரன், முத்துராஜ், மதுராந்தகம் முகமதுஅலி, சக்திகுமார், பிரபாகர் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இதில் லாரி, வேன் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment