திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வியாழக்கிழமை இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமையன்று கந்த சஷ்டி தொடங்கி புதன்கிழமை மாலை சூரசம்ஹார விழா நடைபெற்றது. வியாழக்கிழமை திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு, காலையில் தெய்வானை அம்மன் தபசுக்கு புறப்படும் நிகழ்ச்சியும், மாலையில் சுவாமி குமரவிடங்கப்பெருமான் தனிச்சப்பரத்தில் எழுந்தருளி தெற்குரதவீதி.-மேலரதவீதி சந்திப்பில் வைத்து சுவாமி- அம்பாள் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சியும் நடந்தது.
நள்ளிரவில் திருக்கோவில் இராஜகோபுர வாசலில் உள்ள திருப்பணி மண்டபத்தில் வைத்து சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் திரளான
பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் திருக்கல்யாணத்தை முன்னிட்டு பக்தர்கள் மொய் எழுதி, பிரசாதம் பெற்றுச் சென்றனர்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமையன்று கந்த சஷ்டி தொடங்கி புதன்கிழமை மாலை சூரசம்ஹார விழா நடைபெற்றது. வியாழக்கிழமை திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு, காலையில் தெய்வானை அம்மன் தபசுக்கு புறப்படும் நிகழ்ச்சியும், மாலையில் சுவாமி குமரவிடங்கப்பெருமான் தனிச்சப்பரத்தில் எழுந்தருளி தெற்குரதவீதி.-மேலரதவீதி சந்திப்பில் வைத்து சுவாமி- அம்பாள் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சியும் நடந்தது.
நள்ளிரவில் திருக்கோவில் இராஜகோபுர வாசலில் உள்ள திருப்பணி மண்டபத்தில் வைத்து சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் திரளான
பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் திருக்கல்யாணத்தை முன்னிட்டு பக்தர்கள் மொய் எழுதி, பிரசாதம் பெற்றுச் சென்றனர்.
No comments:
Post a Comment