காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜி.கே. வாசன் நீக்கம்
சென்னை, நவ. 3-
தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த ஞானதேசிகன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அத்துடன் காங்கிரஸ் மேலிடத்தை விமர்சித்தார். இந்த கருத்தை ஜி.கே. வாசனும் ஆதரித்தார். ஞானதேசிகன் ராஜினாமா செய்த உடனேயே ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று காலை காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்தார். புதிய கட்சிக்கான கொடி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
புதிதாக கட்சி தொடங்குவேன் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஜி.கே. வாசன் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஒழுங்கு நடவடிக்கை காரணமாக 6 வருடங்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த ஞானதேசிகன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அத்துடன் காங்கிரஸ் மேலிடத்தை விமர்சித்தார். இந்த கருத்தை ஜி.கே. வாசனும் ஆதரித்தார். ஞானதேசிகன் ராஜினாமா செய்த உடனேயே ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று காலை காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்தார். புதிய கட்சிக்கான கொடி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
புதிதாக கட்சி தொடங்குவேன் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஜி.கே. வாசன் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஒழுங்கு நடவடிக்கை காரணமாக 6 வருடங்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
No comments:
Post a Comment