Monday, 3 November 2014

சென்னை நகரில் வாக்காளர் பெயர் சேர்ப்பு இறுதி முகாம் 3,509 இடங்களில் நடந்தது மழை காரணமாக அதிகமானோர் பங்கேற்கவில்லை

சென்னை நகரில் (2.11.2014) வாக்காளர் பெயர் சேர்ப்பு இறுதி முகாம் 3,509 இடங்களில் நடந்தது மழை காரணமாக அதிகமானோர் பங்கேற்கவில்லைசென்னை,

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளுக்கு, இந்த ஆண்டுக்கான வாக்காளர் பெயர் சேர்ப்பு இறுதிக்கட்ட சிறப்பு முகாம் நேற்று 3,509 இடங்களில் நடைபெற்றது. மழை காரணமாக அதிகமானோர் பங்கேற்கவில்லை.

3,509 இடங்களில் சிறப்பு முகாம்

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில், இந்த ஆண்டுக்கான இறுதிக்கட்ட வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நேற்றுடன் முடிவடைந்தது. சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் சென்னை பள்ளிகள் உள்பட 3 ஆயிரத்து 509 இடங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கடந்த அக்டோபர் 15-ந்தேதி சென்னை மாநகராட்சி அலுவலகங்களில் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த வரைவு பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் மற்றும் முகவரி மாற்றம், திருத்தம் செய்தல், நீக்குதல் தொடர்பாக விண்ணப்பிக்கவும், மேலும் 2015-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி 18 வயது பூர்த்தி அடைபவர்கள் புதிதாக விண்ணப்பிப்பதற்கான சிறப்பு முகாம்களை அக்டோபர் 26 மற்றும் நவம்பர் 2-ந் தேதி நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

ஆன்-லைன், மண்டல அலுவலகங்களில்...

அதன்படி, இந்த ஆண்டுக்கான வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தலுக்கான இறுதிகட்ட சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதில், புதிதாக பெயர் சேர்க்க விரும்புபவர்களுக்கு படிவம்-6, திருத்தம் செய்பவர்களுக்கு படிவம்-8, ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்பவர்களுக்கு படிவம்-8ஏ, பெயரை நீக்குவதற்கு படிவம்-7, அடையாள அட்டை தொலைந்தவர்களுக்கு படிவம்-001 சி, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு படிவம்-6ஏ ஆகிய படிவங்கள் வழங்கப்பட்டன.

நேற்று காலை முதல் சென்னையில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்ததால், சிறப்பு முகாம்களுக்கு அதிகமானோர் வரவில்லை என்று தெரிகிறது. இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தாதவர்கள் வருகிற 10-ந்தேதி வரை, ஆன்-லைன் மற்றும் மண்டல அலுவலகங்களில் சென்று விண்ணப்பித்து கொள்ளலாம்.

மார்ச் மாதத்துக்குள்வண்ண அடையாள அட்டை

இந்த சிறப்பு முகாம்களில் விண்ணப்பித்து உள்ளவர்களுக்கான திருத்தங்களுடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற ஜனவரி 5-ந்தேதி வெளியிடப்பட உள்ளது. மேலும், தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25-ந்தேதி முதல் வண்ண வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன.

முதலில், புதிதாக 18 வயது பூர்த்தி அடைந்தவர்களுக் கான அடையாள அட்டைகள் வழங்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து மற்றவர்களுக் கான வண்ண அடையாள அட்டைகளும் வழங்கப்பட உள்ளன. ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதத்திற்குள் அனைவருக்கும் வண்ண அடையாள அட்டை வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தேர்தல் துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment