Monday, 3 November 2014

இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை பல்லாவரத்தில் ரெயில் மறியல் போராட்டம்


தாம்பரம்,
தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்த இலங்கை அரசை கண்டித்தும், தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களையும் விடுதலை செய்யக்கோரியும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கம் ஆகியவற்றின் சார்பில் பல்லாவரம் ரெயில் நிலையத்தில் (2.11.2014) ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
பெரியார் திராவிடர் கழக துணைத்தலைவர் துரைசாமி தலைமையில் சட்டத்துறை செயலாளர் இளங்கோவன், வடக்கு மண்டல அமைப்பாளர் அண்ணாமலை, அம்பேத்கர் மக்கள் நீதி இயக்க அமைப்பாளர் பாண்டியராசன் உள்பட பலர் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த மின்சார ரெயிலை மறித்து போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து ரெயில் மறியலில் ஈடுபட்ட 35 பேரை போலீசார் கைது செய்து பல்லாவரத்தில் உள்ள பள்ளியில் தங்க வைத்தனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment