: கோவைக்கு ஜெ., அறிவித்த சிறப்பு திட்டப்பணிகளை ஆய்வு செய்ய வரும், உயரதிகாரிகளுக்காக, 17.5 லட்சம் ரூபாயில் சொகுசு கார் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்த பணியுமே துவங்காத நிலையில், ஆய்வுக்கு வரும் அதிகாரிகளுக்கு, சொகுசு கார் வாங்குவது வேடிக்கையாக உள்ளது.
கோவை மாநகராட்சியில், அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்ட, உக்கடம் மேம்பாலம், மேற்கு புறவழிச்சாலை திட்டங்கள், மூன்றாண்டுக்கு மேலாகியும் துவங்கவில்லை. தி.மு.க., ஆட்சிக்காலத்தில் அறிவித்த மேம்பாலங்கள், ரயில்வே மேம்பாலப் பணிகள் மட்டுமே, தற்போது நடக்கிறது.இதனால், கடும் அதிருப்தியில் இருந்த கோவை மக்களை குளிர்விக்கும் வகையில், மேயர் பதவிக்கான இடைத்தேர்தலுக்கு முன்பாக, முன்னாள் முதல்வர் ஜெ., கோவைக்கு சிறப்பு திட்டங்களை அறிவித்தார்.
வெள்ளலுாரில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட், நவீன வசதிகளுடன் புறநகர் பகுதிக்கு லாரிப்பேட்டை இடமாற்றம், வெள்ளலுாரில் குடிசை மாற்று வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்பு, 'மல்டி லெவல் பார்க்கிங்', கட்டட கழிவுகளை மறுசுழற்சி செய்யும் திட்டம், சங்கனுார் பள்ளத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அரைவட்ட சாலை அமைப்பது, இணைப்பு பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட சிறப்பு திட்டங்கள், 2,379 கோடி ரூபாய்க்கு அறிவிக்கப்பட்டது.இந்த திட்டப்பணிகளுக்காக சிறப்பு ஒருங்கிணைப்பாளரை நியமிக்கவும், ஒவ்வொரு பணிக்கும் கண்காணிப்பு குழு அமைக்கவும் மாமன்றத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து திட்டப்பணிகளும் காகித அளவிலேயே உள்ளன. ஏற்கனவே நிதி ஒதுக்கீடு, கட்டட கழிவு மறுசுழற்சி திட்டம் கூட துவங்கப்படவில்லை.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் அறிவித்த சிறப்பு திட்டப்பணிகளை ஆய்வு செய்வதற்காக, சென்னையில் இருந்து வரும் உயர் அதிகாரிகளை, அழைத்து செல்வதற்காக, 17.5 லட்சம் ரூபாயில், புதிதாக 'இனோவா' கார் வாங்க, மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இன்று நடக்கும் அவசர கூட்டத்தில், இதற்கான தீர்மானமும் கொண்டு வரப்படுகிறது.அவசர கூட்ட தீர்மானத்தில், 'கோவை மாநகராட்சி, 105.06 சதுர கி.மீ., பரப்பில் இருந்து, 257.04 சதுர கி.மீ.,யாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி மேம்பாட்டு பணிகளுக்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, திட்ட செயலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சட்டசபையில், அரசு மானியக்கோரிக்கையில், கோவை மாநகராட்சிக்கு, 2379 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சி பணிகளை முதல்வர் அறிவித்தார். திட்டப்பணிகளை செயலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
'திட்டங்களின் நடவடிக்கைகள், முன்னேற்றங்களை பார்வையிட்டு, ஆய்வு செய்யவும் நகராட்சி நிர்வாக ஆணையரகம் மற்றும் தமிழக அரசு செயலகத்தில் இருந்து வி.ஐ.பி., அந்தஸ்துள்ள உயர் அலுவலர்கள் அவ்வப்போது வருகின்றனர். கோவை வரும் அவர்களை அழைத்து வருவதற்கும், ஆய்வுக்கு அழைத்து செல்லவும், மாநகராட்சியில் சிறப்பு வாகனங்கள் எதுவும் இல்லை. மாநகராட்சி அலுவலர்களின் வாகனங்களையே பயன்படுத்தும் சூழ்நிலை உள்ளது.'உயர் அதிகாரிகளின் ஆய்வு பணிக்காக, இனோவா கார், 17.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் அனுமதி பெற்று, வாகனம் வாங்க முடிவு செய்யப்படுகிறது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.கோவை மாநகராட்சியில் கடந்த மூன்றரை ஆண்டுகளாக, எந்த பணியும் நடக்கவில்லை.
மாநகராட்சி பட்ஜெட்டிலும், மன்ற கூட்டங்களிலும் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்கள் முடங்கியும், காகித அளவிலும் உள்ளன. ரோடு, சாக்கடை, மழைநீர் வடிகால் பணிகள் மட்டுமே, மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.முன்னாள் முதல்வர் அறிவித்த சிறப்பு திட்டங்களுக்கு, அதிகாரிகள் ஆலோசனை கூட்டங்கள் மட்டும் நடக்கின்றன. பணியே துவங்காத நிலையில், ஆய்வுக்கு வரும் அதிகாரிகளுக்காக, மக்களின் வரிப்பணம் பல லட்சத்தை செலவு செய்து, 'இனோவா' கார் வாங்குவது வேடிக்கையாக உள்ளது.
கோவை மாநகராட்சியில், அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்ட, உக்கடம் மேம்பாலம், மேற்கு புறவழிச்சாலை திட்டங்கள், மூன்றாண்டுக்கு மேலாகியும் துவங்கவில்லை. தி.மு.க., ஆட்சிக்காலத்தில் அறிவித்த மேம்பாலங்கள், ரயில்வே மேம்பாலப் பணிகள் மட்டுமே, தற்போது நடக்கிறது.இதனால், கடும் அதிருப்தியில் இருந்த கோவை மக்களை குளிர்விக்கும் வகையில், மேயர் பதவிக்கான இடைத்தேர்தலுக்கு முன்பாக, முன்னாள் முதல்வர் ஜெ., கோவைக்கு சிறப்பு திட்டங்களை அறிவித்தார்.
வெள்ளலுாரில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட், நவீன வசதிகளுடன் புறநகர் பகுதிக்கு லாரிப்பேட்டை இடமாற்றம், வெள்ளலுாரில் குடிசை மாற்று வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்பு, 'மல்டி லெவல் பார்க்கிங்', கட்டட கழிவுகளை மறுசுழற்சி செய்யும் திட்டம், சங்கனுார் பள்ளத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அரைவட்ட சாலை அமைப்பது, இணைப்பு பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட சிறப்பு திட்டங்கள், 2,379 கோடி ரூபாய்க்கு அறிவிக்கப்பட்டது.இந்த திட்டப்பணிகளுக்காக சிறப்பு ஒருங்கிணைப்பாளரை நியமிக்கவும், ஒவ்வொரு பணிக்கும் கண்காணிப்பு குழு அமைக்கவும் மாமன்றத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து திட்டப்பணிகளும் காகித அளவிலேயே உள்ளன. ஏற்கனவே நிதி ஒதுக்கீடு, கட்டட கழிவு மறுசுழற்சி திட்டம் கூட துவங்கப்படவில்லை.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் அறிவித்த சிறப்பு திட்டப்பணிகளை ஆய்வு செய்வதற்காக, சென்னையில் இருந்து வரும் உயர் அதிகாரிகளை, அழைத்து செல்வதற்காக, 17.5 லட்சம் ரூபாயில், புதிதாக 'இனோவா' கார் வாங்க, மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இன்று நடக்கும் அவசர கூட்டத்தில், இதற்கான தீர்மானமும் கொண்டு வரப்படுகிறது.அவசர கூட்ட தீர்மானத்தில், 'கோவை மாநகராட்சி, 105.06 சதுர கி.மீ., பரப்பில் இருந்து, 257.04 சதுர கி.மீ.,யாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி மேம்பாட்டு பணிகளுக்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, திட்ட செயலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சட்டசபையில், அரசு மானியக்கோரிக்கையில், கோவை மாநகராட்சிக்கு, 2379 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சி பணிகளை முதல்வர் அறிவித்தார். திட்டப்பணிகளை செயலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
'திட்டங்களின் நடவடிக்கைகள், முன்னேற்றங்களை பார்வையிட்டு, ஆய்வு செய்யவும் நகராட்சி நிர்வாக ஆணையரகம் மற்றும் தமிழக அரசு செயலகத்தில் இருந்து வி.ஐ.பி., அந்தஸ்துள்ள உயர் அலுவலர்கள் அவ்வப்போது வருகின்றனர். கோவை வரும் அவர்களை அழைத்து வருவதற்கும், ஆய்வுக்கு அழைத்து செல்லவும், மாநகராட்சியில் சிறப்பு வாகனங்கள் எதுவும் இல்லை. மாநகராட்சி அலுவலர்களின் வாகனங்களையே பயன்படுத்தும் சூழ்நிலை உள்ளது.'உயர் அதிகாரிகளின் ஆய்வு பணிக்காக, இனோவா கார், 17.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் அனுமதி பெற்று, வாகனம் வாங்க முடிவு செய்யப்படுகிறது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.கோவை மாநகராட்சியில் கடந்த மூன்றரை ஆண்டுகளாக, எந்த பணியும் நடக்கவில்லை.
மாநகராட்சி பட்ஜெட்டிலும், மன்ற கூட்டங்களிலும் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்கள் முடங்கியும், காகித அளவிலும் உள்ளன. ரோடு, சாக்கடை, மழைநீர் வடிகால் பணிகள் மட்டுமே, மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.முன்னாள் முதல்வர் அறிவித்த சிறப்பு திட்டங்களுக்கு, அதிகாரிகள் ஆலோசனை கூட்டங்கள் மட்டும் நடக்கின்றன. பணியே துவங்காத நிலையில், ஆய்வுக்கு வரும் அதிகாரிகளுக்காக, மக்களின் வரிப்பணம் பல லட்சத்தை செலவு செய்து, 'இனோவா' கார் வாங்குவது வேடிக்கையாக உள்ளது.
No comments:
Post a Comment