மலேசியாவில் வேலை வாங்கித்தருவதாக மோசடி பல்லாவரம் விடுதியில் வாலிபர்
தற்கொலை முயற்சி போலீசாரின் துரித நடவடிக்கையால் உயிர் பிழைத்தார்
தாம்பரம்,
மலேசியாவில் வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்ததால் ஏமாந்த வாலிபர், பல்லாவரம் விடுதியில் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். உரிய நேரத்தில் சென்று அவரை போலீசார் காப்பாற்றினர்.
மலேசியாவில் வேலை சேலம் ஜாகிர்அம்மாபாளையம், பாரதி நகரைச் சேர்ந்தவர் அருணகிரி(வயது 22). இவர், விசுவல் கம்யூனிகேஷன் படித்தவர். வேலை தேடி வந்த இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த அப்துல்லா என்பவர் மலேசியாவில் வேலை வாங்கித்தருவதாக கூறினார்.
அதற்காக ரூ.2 லட்சம் பெற்றுக்கொண்டு கடந்த மாதம் 25–ந்தேதி அருணகிரியை மலேசியாவிற்கு அனுப்பினார். மலேசியா சென்ற அருணகிரிக்கு, சுற்றுலா விசாவில் வந்து இருப்பதாக கூறி வேலை தர மறுத்து விட்டதாக தெரிகிறது.
சென்னை திரும்பினார் அதன்பிறகே அவருக்கு அப்துல்லா ரூ.2 லட்சம் வாங்கிக்கொண்டு வேலைக்கான விசா என்று கூறி ஏமாற்றி, சுற்றுலா விசாவில் மலேசியாவுக்கு அனுப்பி வைத்தது தெரிந்தது. இதனால் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்த அருணகிரி, நேற்று முன்தினம் மலேசியாவில் இருந்து விமானத்தில் சென்னை திரும்பி வந்தார்.
பின்னர் பல்லாவரம் தர்கா ரோட்டில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினார். ரூ.2 லட்சம் கொடுத்து வெளிநாட்டு வேலை கிடைக்காமல் ஏமாந்ததால் மனமுடைந்த அருணகிரி, நேற்று அதிகாலை சொந்த ஊரில் உள்ள தனது பெரியப்பா துரைசாமிக்கு போன் செய்து, வெளிநாட்டில் வேலை கிடைக்கும் என பணம் கொடுத்து ஏமாந்த விவரத்தை கூறினார்.
தற்கொலை முயற்சி மேலும் அவர், பல்லாவரத்தில் தங்கி உள்ள விடுதி முகவரியை தெரிவித்து, தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த துரைசாமி, இதுபற்றி சேலம் சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் பல்லாவரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக பல்லாவரம் போலீசார் அருணகிரி தங்கி இருந்த விடுதிக்கு விரைந்து சென்று பார்த்தனர். அங்கு விடுதி அறையில் அருணகிரி தனது கை மணிக்கட்டு பகுதியில் அறுத்துக்கொண்டு ரத்தம் வழிந்த நிலையில் மயங்கி கிடந்தார்.
போலீசார் அவரை மீட்டு பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று உரிய சிகிச்சை அளித்து அருணகிரியின் உயிரை காப்பாற்றினர். இதற்கிடையில் துரைசாமியும் சென்னை வந்து விட்டார். போலீசார் அருணகிரிக்கு அறிவுரை கூறி துரைசாமியுடன் அனுப்பி வைத்தனர். போலீசாரின் துரித நடவடிக்கையால் வாலிபரின் உயிர் காப்பாற்றப்பட்டது.
தாம்பரம்,
மலேசியாவில் வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்ததால் ஏமாந்த வாலிபர், பல்லாவரம் விடுதியில் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். உரிய நேரத்தில் சென்று அவரை போலீசார் காப்பாற்றினர்.
மலேசியாவில் வேலை சேலம் ஜாகிர்அம்மாபாளையம், பாரதி நகரைச் சேர்ந்தவர் அருணகிரி(வயது 22). இவர், விசுவல் கம்யூனிகேஷன் படித்தவர். வேலை தேடி வந்த இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த அப்துல்லா என்பவர் மலேசியாவில் வேலை வாங்கித்தருவதாக கூறினார்.
அதற்காக ரூ.2 லட்சம் பெற்றுக்கொண்டு கடந்த மாதம் 25–ந்தேதி அருணகிரியை மலேசியாவிற்கு அனுப்பினார். மலேசியா சென்ற அருணகிரிக்கு, சுற்றுலா விசாவில் வந்து இருப்பதாக கூறி வேலை தர மறுத்து விட்டதாக தெரிகிறது.
சென்னை திரும்பினார் அதன்பிறகே அவருக்கு அப்துல்லா ரூ.2 லட்சம் வாங்கிக்கொண்டு வேலைக்கான விசா என்று கூறி ஏமாற்றி, சுற்றுலா விசாவில் மலேசியாவுக்கு அனுப்பி வைத்தது தெரிந்தது. இதனால் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்த அருணகிரி, நேற்று முன்தினம் மலேசியாவில் இருந்து விமானத்தில் சென்னை திரும்பி வந்தார்.
பின்னர் பல்லாவரம் தர்கா ரோட்டில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினார். ரூ.2 லட்சம் கொடுத்து வெளிநாட்டு வேலை கிடைக்காமல் ஏமாந்ததால் மனமுடைந்த அருணகிரி, நேற்று அதிகாலை சொந்த ஊரில் உள்ள தனது பெரியப்பா துரைசாமிக்கு போன் செய்து, வெளிநாட்டில் வேலை கிடைக்கும் என பணம் கொடுத்து ஏமாந்த விவரத்தை கூறினார்.
தற்கொலை முயற்சி மேலும் அவர், பல்லாவரத்தில் தங்கி உள்ள விடுதி முகவரியை தெரிவித்து, தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த துரைசாமி, இதுபற்றி சேலம் சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் பல்லாவரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக பல்லாவரம் போலீசார் அருணகிரி தங்கி இருந்த விடுதிக்கு விரைந்து சென்று பார்த்தனர். அங்கு விடுதி அறையில் அருணகிரி தனது கை மணிக்கட்டு பகுதியில் அறுத்துக்கொண்டு ரத்தம் வழிந்த நிலையில் மயங்கி கிடந்தார்.
போலீசார் அவரை மீட்டு பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று உரிய சிகிச்சை அளித்து அருணகிரியின் உயிரை காப்பாற்றினர். இதற்கிடையில் துரைசாமியும் சென்னை வந்து விட்டார். போலீசார் அருணகிரிக்கு அறிவுரை கூறி துரைசாமியுடன் அனுப்பி வைத்தனர். போலீசாரின் துரித நடவடிக்கையால் வாலிபரின் உயிர் காப்பாற்றப்பட்டது.
No comments:
Post a Comment