சென்னை, நவ. 3–
பெருந்தலைவர் காமராஜர் உருவாக்கிய சத்திய மூர்த்தி பவன் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளைக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. சத்தியமூர்த்தி பவன், தேனாம்பேட்டை காங்கிரஸ் வளாகம், காமராஜர் அரங்கம் உள்ளிட்டவை இந்த அறக்கட்டளை மூலம் பராமரிக்கப்படுகிறது.
இந்த அறக்கட்டளை கட்சியின் மூத்த தலைவர்கள் 4 பேரின் மேற்பார்வையில் செயல்படுகிறது. அறக்கட்டளை சொத்துக்களின் பேரில் எடுக்கப்படும் எந்த ஒரு முடிவையும் இவர்கள் ஒப்புதல் பெற்றே நிறைவேற்ற முடியும்.
ஜி.கே.மூப்பனார் காங்கிரசில் இருந்து விலகி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். அப்போது காங்கிரஸ் தலைமை இடமான சத்தியமூர்த்தி பவனையும் அந்த கட்சி கைப்பற்றிக் கொண்டது.
த.மா.கா. தொடங்கப்பட்ட 1996–ல் தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை பெறுப்பாளர்களாக ஜி.கே.மூப்பனார், ப.சிதம்பரம், ப.ராமச்சந்திரன், என்.ராமசாமி உடையார் ஆகியோர் இருந்தனர். அனைவரும் மூப்பனார் முடிவை ஆதரித்தனர். எனவே சத்தியமூர்த்தி பவன் த.மா.க.விடமே இருந்தது.
ஜி.கே.வாசன் காங்கிரசில் இருந்து விலகி மீண்டும் த.மா.கா. தொடங்குவதால் சத்தியமூர்த்தி பவன் மீண்டும் அந்த கட்சியின் வசம் செல்லுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது என்றாலும் அதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை நிர்வாகிகளாக இப்போது முன்னாள் மத்திய மந்திரிகள் ஜெயந்தி நடராஜன், சுதர்சனநாச்சியப்பன், ஜி.கே.வாசன், முன்னாள் எம்.எல்.ஏ. யசோதா ஆகியோர் உள்ளனர். எனவே, இன்றைய நிலைமைவேறு.
மூப்பனார் காங்கிரசில் இருந்து விலகியபோது அவரது கட்டுப்பாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை இருந்தது. இப்போது ஜி.கே.வாசன் தவிர மற்ற 3 பேரும் கட்சி மேலிடத்தை மதிப்போம் என்று கூறுவதால் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையை ஆதரிக்கிறார்கள்.
மேலும் மூப்பனார் தலைமையில் அன்று காங்கிரஸ் செயல்பட்டதால், சத்தியமூர்த்தி பவனிலேயே த.மா.கா.வும் செயல்படத் தொடங்கியது. எனவே காங்கிரஸ் வேறு அலுவலகத்தை தேட வேண்டிய நிலமை ஏற்பட்டது.
இப்போது ஞானதேசிகன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகி வெளியே சென்று விட்டார். புதிய தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சத்தியமூர்த்தி பவனில் பதவி ஏற்று விட்டார். ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் வெளியே சென்று கூட்டம் நடத்தி வருகிறார்கள்.
தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை பொறுப்பாளர்களில் ஜி.கே. வாசன் தவிர மற்றவர்கள் காங்கிரஸ் பக்கமே உள்ளனர். எனவே சத்தியமூர்த்தி பவனை ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் நெருங்க முடியாது என்று காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பெருந்தலைவர் காமராஜர் உருவாக்கிய சத்திய மூர்த்தி பவன் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளைக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. சத்தியமூர்த்தி பவன், தேனாம்பேட்டை காங்கிரஸ் வளாகம், காமராஜர் அரங்கம் உள்ளிட்டவை இந்த அறக்கட்டளை மூலம் பராமரிக்கப்படுகிறது.
இந்த அறக்கட்டளை கட்சியின் மூத்த தலைவர்கள் 4 பேரின் மேற்பார்வையில் செயல்படுகிறது. அறக்கட்டளை சொத்துக்களின் பேரில் எடுக்கப்படும் எந்த ஒரு முடிவையும் இவர்கள் ஒப்புதல் பெற்றே நிறைவேற்ற முடியும்.
ஜி.கே.மூப்பனார் காங்கிரசில் இருந்து விலகி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். அப்போது காங்கிரஸ் தலைமை இடமான சத்தியமூர்த்தி பவனையும் அந்த கட்சி கைப்பற்றிக் கொண்டது.
த.மா.கா. தொடங்கப்பட்ட 1996–ல் தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை பெறுப்பாளர்களாக ஜி.கே.மூப்பனார், ப.சிதம்பரம், ப.ராமச்சந்திரன், என்.ராமசாமி உடையார் ஆகியோர் இருந்தனர். அனைவரும் மூப்பனார் முடிவை ஆதரித்தனர். எனவே சத்தியமூர்த்தி பவன் த.மா.க.விடமே இருந்தது.
ஜி.கே.வாசன் காங்கிரசில் இருந்து விலகி மீண்டும் த.மா.கா. தொடங்குவதால் சத்தியமூர்த்தி பவன் மீண்டும் அந்த கட்சியின் வசம் செல்லுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது என்றாலும் அதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை நிர்வாகிகளாக இப்போது முன்னாள் மத்திய மந்திரிகள் ஜெயந்தி நடராஜன், சுதர்சனநாச்சியப்பன், ஜி.கே.வாசன், முன்னாள் எம்.எல்.ஏ. யசோதா ஆகியோர் உள்ளனர். எனவே, இன்றைய நிலைமைவேறு.
மூப்பனார் காங்கிரசில் இருந்து விலகியபோது அவரது கட்டுப்பாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை இருந்தது. இப்போது ஜி.கே.வாசன் தவிர மற்ற 3 பேரும் கட்சி மேலிடத்தை மதிப்போம் என்று கூறுவதால் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையை ஆதரிக்கிறார்கள்.
மேலும் மூப்பனார் தலைமையில் அன்று காங்கிரஸ் செயல்பட்டதால், சத்தியமூர்த்தி பவனிலேயே த.மா.கா.வும் செயல்படத் தொடங்கியது. எனவே காங்கிரஸ் வேறு அலுவலகத்தை தேட வேண்டிய நிலமை ஏற்பட்டது.
இப்போது ஞானதேசிகன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகி வெளியே சென்று விட்டார். புதிய தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சத்தியமூர்த்தி பவனில் பதவி ஏற்று விட்டார். ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் வெளியே சென்று கூட்டம் நடத்தி வருகிறார்கள்.
தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை பொறுப்பாளர்களில் ஜி.கே. வாசன் தவிர மற்றவர்கள் காங்கிரஸ் பக்கமே உள்ளனர். எனவே சத்தியமூர்த்தி பவனை ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் நெருங்க முடியாது என்று காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment