Thursday, 13 February 2025

திமுக தலைமை ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் அடங்கியுள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கு மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மாற்றம்: பொறுப்பாளர்கள் நியமனபட்டியல் வெளியிடு


 

திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல் வருமாறு.ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் அடங்கியுள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம


 

▪️ ஈரோடு தெற்கு - அமைச்சர் முத்துசாமி 


▪️ ஈரோடு வடக்கு - என்.நல்லசிவம் 


▪️ ஈரோடு மத்தி - தோப்பு வெங்கடாசலம் 


▪️ திருப்பூர் கிழக்கு - க.செல்வராஜ் 


▪️ திருப்பூர் மேற்கு - அமைச்சர் சாமிநாதன் 


▪️ திருப்பூர் வடக்கு - என்.தினேஷ் குமார் 


▪️ திருப்பூர் தெற்கு - இல. பத்மநாபன் 


▪️ விழுப்புரம் வடக்கு - செஞ்சி மஸ்தான் 


▪️ விழுப்புரம் தெற்கு - கெளதம சிகாமணி 


▪️ விழுப்புரம் மத்தி - ஆர்.லட்சுமணன் 


▪️ மதுரை வடக்கு - அமைச்சர் மூர்த்தி


 ▪️ மதுரை மாநகர் - கோ.தளபதி 


▪️ தஞ்சாவூர் தெற்கு - பழனிவேல் 


▪️ திருநெல்வேலி மத்தி - அப்துல் வகாப் 


▪️ திருவள்ளூர் கிழக்கு - எம்.எஸ்.கே. ரமேஷ் ராஜ் 


▪️ நீலகிரி - கே.எம்.ராஜு

தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளராகப் பணியாற்றி வந்த க.அண்ணாதுரை எம்எல்ஏ. விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதில், 

தாமரைக்குடிக்காட்டை சேர்ந்த பழனிவேல் நியமிக்கப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு கோத்தகிரி, நெடுகுளாவைச் சேர்ந்த கே.எம்.ராஜு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளராகப் பணியாற்றி வரும் டி.பி.எம்.மைதீன்கானை விடுவித்து, அவருக்குப் பதில், மு.அப்துல் வகாப் எம்எல்ஏ பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். 

திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் டி.ஜெ.எஸ்.கோவிந்தராஜன் எம்எல்ஏ அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்

திமுகவில் மேற்கொள்ளப்பட்ட இந்த மாற்றங்களை பொறுத்தவரை, ஏற்கெனவே அதிமுகவில் இருந்து வந்த தோப்பு வெங்கடாசலத்துக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

  விழுப்புரத்திலும் அதிமுகவில் இருந்து வந்த லட்சுமணனுக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.


அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலாளர் பதவியை இழந்த செஞ்சி மஸ்தான், திருநெல்வேலி மத்திய மாவட்டத்தில் அப்துல் வஹாப் ஆகியோருக்கு பிரதிநிதித்துவ அடிப்படையில் பதவி வழங்கப்பட்டுள்ளது. 


நீலகிரியில் படுகர் சமூகத்துக்கு வாய்ப்பளிக்கும் வகையில், கே.எம்.ராஜுவுக்கும், இளைஞர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் திருப்பூரில் மேயர் தினேஷுக்கும், ஆதிதிராவிடர் சமூகத்துக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் திருவள்ளூரில் ரமேஷ்ராஜுக்கும், தஞ்சாவூரில் வெள்ளாளர் சமூகத்தைச் சேர்ந்த பழனிவேலுவுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள
து. 

. இத்தகவல் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





No comments:

Post a Comment