சென்னைக்கு அருகில் அரசுப் பேருந்தில் ஐந்து சவரன் நகை திருடியதாகத் திருப்பத்தூர் மாவட்டம், நரியம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவியான பாரதி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாகக் கோயம்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்துத் திமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில், "கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால், ஊராட்சி மன்றத் தலைவி பாரதி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுகிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் விசாரணையில், பாரதி கடந்த 15 ஆண்டுகளாகத் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும், திருடிய நகைகளை விற்று வணிக வளாகங்கள் கட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவர் மீது ஏற்கனவே 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
விவரம் :
சென்னை கோயம்பேடு அருகே நெற்குன்றத்தைச் சேர்ந்த வரலட்சுமி என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் சென்றுள்ளார். பின்னர் அரசுப் பேருந்தில் மீண்டும் சென்னை திரும்பி இருக்கிறார். அப்போது தனது கைப்பையில் வைத்திருந்த 5 சவரன் நகைகளைக் காணவில்லை என காவல்துறையில் புகார் அளித்தார்.
தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது நகையைத் திருடியது திருப்பத்தூர் மாவட்டம் நரியம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவரான பாரதி என்பது தெரிய வந்தது.
நகை திருட்டு இதனையடுத்து நகை திருட்டு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் பாரதியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். தமிழகம் முழுவதும் பரபரப்பை இந்த விவகாரம் ஏற்படுத்திய நிலையில், அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளனர். குறிப்பாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சாரத்தின் போது பாரதியைக் குறிப்பிட்டு திமுகவை விமர்சித்து வருகிறார்.
திமுக ஊராட்சி மன்ற தலைவர் இந்த நிலையில் நகை திருட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட பாரதியின் வாக்குமூலம் தற்போது வெளியாகி உள்ளது. அதில்," ஊராட்சி மன்ற தலைவராக இருந்தாலும் நகை திருடுவது எப்போதுமே எனக்கு மகிழ்ச்சி அளிக்கும். 15 வருடங்களாக திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு வந்திருக்கிறேன். குறிப்பாக கிருஷ்ணகிரி, வேலூர், வாணியம்பாடி, காஞ்சிபுரம், ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்தில் சென்று அங்கு பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் பேசி நகை பறித்திருக்கிறேன்.
போலீஸ் கைது நகையை திருடியதும் அடுத்த நிறுத்தத்தில் இறங்கி சென்று விடுவேன். இதன் மூலம் கிடைத்த பணம் மற்றும் நகைகளை விற்று எனது சொந்த ஊரான நரியம்பட்டு பகுதியில் வணிக வளாகம் ஒன்றை கட்டியுள்ளேன். அதன் மூலமும் எனக்கு மாதம் ஆயிரக்கணக்கில் வாடகை வருகிறது. தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலில் நின்று நரியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதற்குப் பிறகும் சில இடங்களில் நகை திருடினேன். ஊராட்சி மன்ற தலைவி நகை திருட்டில் ஈடுபடக் கூடாது என எனது குடும்பத்தினர் எவ்வளவோ கெஞ்சினர்.
வாக்குமூலம் ஆனால் நகை திருடும் போது எனக்கு ஒரு மகிழ்ச்சி கிடைக்கும். பணம், வசதி, பதவி வந்து விட்ட பிறகும் நகை பணத்திற்காக இல்லாமல் மகிழ்ச்சிக்காக திருட்டில் ஈடுபட்டேன். ஒவ்வொரு நாளும் இனிமேல் திருட மாட்டேன் என நான் காலையில் எழுந்திருப்பேன். ஆனால் பணம் நகைகளை பார்த்ததும் எப்படியாவது அவற்றை திருட வேண்டும் என என் மனதும் சொல்லும். அதனால் வேறு வழியின்றி தான் திருடினேன்" என பாரதி கூறியதாக போலீசார் சொல்கின்றனர்.
ஊராட்சி மன்றத் தலைவியே திருடுவதுதான் எனக்கு மகிழ்ச்சி' என்று ஒருவர் கூறுவது சமூகத்தில் பல கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்புகிறது. இந்தக் கூற்றை வெவ்வேறு கோணங்களில் நாம் பார்க்கலாம்.
ஊழல் மற்றும் ஏமாற்றம்:
இந்தக் கூற்று, ஊராட்சி மன்றத் தலைவர் போன்ற பொறுப்பான பதவியில் இருப்பவர்களால் ஏற்படும் ஊழல் மற்றும் ஏமாற்றத்தின் மீதுள்ள விரக்தியைக் காட்டுகிறது. மக்கள் தங்கள் தலைவர்களை நம்பி வாக்களிக்கிறார்கள். ஆனால், அவர்கள் திருட்டில் ஈடுபடும்போது, அந்த நம்பிக்கை உடைந்துபோகிறது. இது ஒருவித மனக்கசப்பை ஏற்படுத்துகிறது.
சமூகத்தின் மீதான விரக்தி:
இது ஒரு தனிநபரின் கருத்து மட்டும் அல்ல, சமூகத்தில் பரவலாக இருக்கும் விரக்தியின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். ஊழல் என்பது ஒரு தொடர்ச்சியான பிரச்சினை. அதைத் தடுப்பதில் அரசு மற்றும் மக்கள் இருவரும் தோல்வி அடைந்ததாக இந்த மனநிலை பிரதிபலிக்கிறது. 'அறம்' (morality) என்பது இழந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.
கசப்பான உண்மை மற்றும் கேலி:
சில சமயங்களில், மக்கள் தங்களுக்கு நேரும் துயரங்களை நகைச்சுவை உணர்வுடன் எதிர்கொள்கிறார்கள். 'ஒரு ஊராட்சி மன்றத் தலைவியே திருடுவதுதான் எனக்கு மகிழ்ச்சி' என்பது, ஊழல் ஒரு சாதாரணமாகிவிட்டது என்ற கசப்பான உண்மையை கேலி செய்யும் ஒருவித முயற்சியாக இருக்கலாம். இதில் மகிழ்ச்சி என்பது ஒருவித விரக்தி கலந்த நகைச்சுவையாகவே பார்க்கப்படுகிறது.
இந்தக் கூற்று, ஊழல் என்பது ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல, அது சமூகத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது என்பதைக் காட்டுகிறது. ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தாலும் சரி, எந்தவொரு பொறுப்பான பதவியில் இருந்தாலும் சரி, மக்களின் நம்பிக்கை என்பது மிக முக்கியமானது. அந்த நம்பிக்கை சிதைக்கப்படும்போது, இது போன்ற கருத்துக்கள் சமூகத்தில் வெளிப்படுவது இயல்புதான்.
No comments:
Post a Comment