தமிழக காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்கள் பணியின் போது பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வருகிறார்கள். குறிப்பாக முக்கிய பிரமுகர்களின் வருகையின் போது அவர்கள் செல்லும் வழிப்பாதையில் பாதுகாப்பு பணிக்காக நீண்ட நேரம் பெண் போலீசார் நிற்க வேண்டிய நிலை உள்ளது.
அதுபோன்ற நேரங்களில் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில்
‘‘எனது சுற்றுப்பயணத்தின் போது சாலையோரம் பாதுகாப்பு பணிகளில் பெண் காவலர்கள் இருப்பதை பார்த்துள்ளேன். இனி வரும் காலங்களில் அதுபோன்று பெண் காவலர்களை நீண்ட நேரத்திற்கு பணியில் ஈடுபடுத்த வேண்டாம்.
இதுதொடர்பான உத்தரவை அனைத்து மாவட்ட போலீசாருக்கும் தெரிவிக்க வேண்டும்’’ என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், டி.ஜி.பி.திரிபாதியிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து டி.ஜி.பி. திரிபாதி இதுதொடர்பாக வாய்மொழி உத்தரவை உடனடியாக பிறப்பித்துள்ளார். அதில் முதல்-அமைச்சரின் சுற்றுப்பயணத்தில் அவர் செல்லும் வழிகளில் பெண் போலீசாரை சாலை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment