Wednesday, 23 June 2021

வீட்டுக்கு வராவிட்டால்தேர்ச்சி பெறவிடாமல் செய்து விடுவேன் - போக்சோவில்கைது செய்யப்பட்ட பள்ளி ஆசிரியர்

 ஆன்லைன்  வகுப்புகளையே  தயவு செய்து மூடிவிட்டால் கூட நல்லது .பெற்றவர்கள்  இருக்கும் சூழலில்  கடன் வாங்கி தன் பிள்ளைகளுக்கு படிப்பதற்காக  செல்போன் வாங்கி கொடுக்கின்றனர் . நடக்கும் சூழல்களை பார்த்தால்  பெண் பிள்ளைகளை பள்ளிக்கே அனுப்ப மிகவும் தயக்கம்  தான் ஏற்படும் .பெற்றவர்கள் முன்னிலையில்  ஆன்லைன்  வகுப்பிற்கே  இந்த லட்சணம் என்றால் , பள்ளிசெல்லும் மாணவிகளின் நிலை  சற்று கவலை படவேண்டிய  விஷயம் தான் . உடனே பெண்பிள்ளைகள் மேல் தான் சேற்றை பூசும் சமூக  அரைவேக்காடுகள்  கொஞ்சம்  அந்த பிள்ளைகளின் மனநிலைகளை பார்க்கவேண்டும்.

 

மீண்டும் ஒரு சம்பவம் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில்  நடந்தேறியுள்ளது .

 

முதுகுளத்தூரில் பள்ளி மாணவியிடம் பாலியல்ரீதியாக பேசிய புகாரில் ஆசிரியர் போக்சோவில் கைது.பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரில் அறிவியல் ஆசிரியர் ஹபீப் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.அரசு உதவிபெறும் பள்ளி மாணவியிடம் ஆசிரியர் பாலியல்ரீதியாக பேசும் ஆடியோ வெளியாகி சர்ச்சைக்குள்ளானது.

தனது வீட்டுக்கு வராவிட்டால் மதிப்பெண்ணை குறைத்து தேர்ச்சி பெறவிடாமல் செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் செயல்படும் அரசு உதவிபெறும் பள்ளியான பள்ளிவாசல் மேல்நிலை பள்ளியில் முதுகுளத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதியில் இருந்து 1500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றும் ஹபீப் என்பவர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாக தெரிகிறது.

பள்ளியில் படிக்கும் மாணவியின் செல்போன் எண்ணை வாங்கி அவரது வீட்டில் பெற்றோர் இல்லாத சமயத்தில் பேசி புத்தகத்தை எடுத்துக் கொண்டு தனது வீட்டிற்கு வருமாறு தெரிவித்துள்ளார். ஒருவேளை அப்படி வர மறுத்தால், ’உனக்கும் மார்க் குறைவாக போட்டு தேர்ச்சியடைய விடாமல் செய்து விடுவேன்’ என்று மிரட்டல் விடுத்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுபோல பல மாணவிகள் தனது வீட்டிற்கு புத்தகத்துடன் வந்துள்ளதாகவும் அதுபோல் நீயும் வரவேண்டுமென்று ஒரு மாணவியுடன் ஆசிரியர் ஹபீப் பேசும் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. பள்ளி ஆசிரியரால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முதுகுளத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ராகவேந்திரர் ரவி விசாரணை நடத்தி வந்தார். போலீசார் விசாரணையை அடுத்து ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

 


பாலியல் தொல்லையும், ஆசிரியர்கள் கைதும்’ தமிழகத்தை உலுக்கிய சமீபத்திய சம்பவங்கள்!

 தமிழ்நாட்டில் பள்ளிகளில் பாலியல் குற்றங்களுக்காக கடந்த சில ஆண்டுகளில் நிறைய ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொதுவாக பெற்றோர்கள்  தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் நலமுடன் இருக்க பலவிதங்களில் போராடி  குழந்தைகளின்  கல்விக்காக  தரமான கல்விக்கூடங்கள்,கல்லூரிகளை  தேர்வு செய்கின்றனர் . அதேபோல  புனிதமான ஆசிரியர்பணிமூலம்  சிறந்த மாணவர்களை  உருவாக்கி  அவரவர் வாழும் தேசத்திற்கு  பெருமை சேர்த்த புனிதவான்கள்  வாழ்ந்த  இந்த மண்ணில்  கேடுகெட்ட  மனங்களை கொண்ட  மனிதமிருகங்கள்  இந்த புனித பணியில் இருந்துகொண்டு பாலியல் குற்றங்களை செய்து , அந்த குழுமத்தின் பெயர் ,மாணவ செல்வங்களின் வாழ்க்கையைகெடுத்தும் வருகிறது  கெடுத்தஅப்படிப்பட்டசில  கொடூரன்கள்   ஒரு சிலரை பார்க்கலாம் .

சென்னையில் பிரபல தனியார் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து அந்தப் பள்ளி நிர்வாகம் அந்த ஆசிரியர் ராஜ்கோபால் என்பவரை தற்காலிக இடைநீக்கம் செய்துள்ளது. கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன் மட்டுமின்றி இன்னும் பல ஆசிரியர்கள் இப்படி உள்ளே இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.தமிழகத்தில் பள்ளி மாணவிகள் மீது ஆசிரியர்கள் பாலியல் வன்மம் கொள்ளும் நிகழ்வுகள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. அவ்வாறு நடந்த சில குற்றச் சம்பவங்களையும், அதில் கைதான ஆசிரியர்களையும் பார்க்கலாம். 

அதையடுத்து சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தும் பாலியல் புகாரில் சிக்கினார்.சென்னை பிரைம் தடகள பயிற்சி மையத்தின் பயிற்சியாளர் நாகராஜன் என்பவரும் விளையாட்டு வீராங்கனைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை போரூரை அடுத்த கெருகம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் பத்ம சேஷாத்திரி மில்லினியம் பள்ளியில் கராத்தே பயிற்சியாளராக பணியாற்றி வந்த கெபிராஜ் என்ற கராத்தே மாஸ்டர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், விளையாட்டு போட்டிகளுக்கு அழைத்துச்செல்லும்போதும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு இளம்பெண் ஒருவர், அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.


சென்னை கேளம்பாக்கம் சுஷில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது பள்ளி மாணவிகள் பாலியல் புகார் கொடுத்ததன் பேரில் அவர் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக சுஷில் ஹரி பள்ளியில் பணிபுரிந்த பாரதி, தீபா என்ற 2 பெண் ஆசிரியர்களும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.சிவசங்கர் பாபாவுக்கு எதிராக புகார்கள் கொடுக்க வேண்டும் என்றால் புலன்விசாரணை அதிகாரி குணவர்மன் தொலைபேசி எண் வாயிலாக புகார்களை தெரிவிக்கலாம்என்று9840558992.மின்னஞ்சல் முகவரிக்கு inspocu2@gmail.com -ல் புகார்கள் தெரிவிக்கலாம்.சிபிசிஐடி தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு முதல் கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் அனைத்து செயல்படவில்லை. இதனால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலிலும் கடந்த ஆண்டு இரண்டு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். 

 

கடந்த அக்டோபர் மாதம் கார்த்திக்(26) என்ற ஆசிரியர் பள்ளி மாணவர் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக கைது செய்யப்பட்டார். 9 வகுப்பு மாணவரை தனது வீட்டிற்கு அழைத்து பாடம் சொல்லி தருவதாக கூறி பாலியல் ரிதியில் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பெயரில் செங்கல்பட்டு காவல்துறை அவரை கைது செய்தது. 


 

2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோவையின் துடியலூர் பகுதியில் அனைத்து மகளிர் காவல்துறையினர் 50 வயது மதிக்கதக்க ஆசிரியரை கைது செய்தனர். அவர் ஒரு பள்ளியில் 6 வகுப்பிற்கு ஆசிரியராக இருந்து வந்துள்ளார். அப்போது 6 வகுப்பு மற்றும் 7 வகுப்பு மாணவிகளிடம் தவறாக நடக்க முற்பட்டுள்ளார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் பள்ளி நிர்வாகம் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. அதன்பின்னர் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்த ஆசிரியரை கைது செய்து போக்சோ சட்டம் உட்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். 

திருவண்ணாமலை ஆரணி மாவட்டத்திலும் 2019ஆம் ஆண்டு நித்யா(30) என்ற ஆசிரியை பாலியல் குற்றம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். இவருடைய கணவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு புகாரை அளித்துள்ளார். அதில், இந்த ஆசிரியையின் மொபைல் போனில் பல மாணவர்களுடன் தவறாக இருந்த படங்கள் இருப்பதாக கூறினார். அதனைத் தொடர்ந்து நடந்த விசாரணயில் நித்யா நீண்ட நாட்களுக்கு இந்த தவறில் ஈடுபட்டு வந்தது கண்டறியப்பட்டது. ஏற்கெனவே அவர் இருந்த ஒரு பள்ளியில் புகார் எழுந்ததன் பெயரில் அவர் வேறு ஒரு பள்ளிக்கு மாற்றப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவை தவிர சேலத்தில் கொண்டாலம்பட்டியில் தலைமை ஆசிரியர் ஒருவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டார். இதேபோல் தமிழ்நாட்டில் சமீபத்தில் சில ஆண்டுகளில் நிறையே வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்தச் சூழலில் தற்போதும் அந்த அவலம் தொடர்ந்து வருவது பெரும்அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது. 

2012-ஆம் ஆண்டு போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்பின்னர் பள்ளிகள் தங்களுடைய நிறுவனத்தில் பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க ஒரு குழுவை அமைக்க வேண்டும். அத்துடன் மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு தொடர்பான விழிப்புணர்வையும் அளிக்க வேண்டும். ஆனால் இந்த விஷயம் தொடர்பாக எந்த பள்ளியும் பெரியளவில் நடவடிக்கை எடுக்கவில்லை. அதிகபட்சம் பள்ளியில் ஒரு குழு மட்டும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் புகார் பேட்டியில் விழும் புகார்கள் தொடர்பாக இந்த குழுக்கள் விசாரணை செய்கின்றனவா என்பது பெரிய கேள்வி குறியாக உள்ளது. மாணவர்களின் புகாரை பள்ளிகள் கேட்டு ஒழுங்கான நடவடிக்கை எடுத்தால் இது போன்ற சம்பவங்கள் குறை வாய்ப்பு உள்ளதாக குழந்தை நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். 

 

 

டெல்லியில்நடைபெற இருந்த காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் ஒத்திவைப்பு..!!

 

டெல்லியில்22.06.2021ஆம் தேதிநடைபெற இருந்த காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் ஜூன் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

. காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 12வது கூட்டம் ஒன்றிய நீர் ஆணைய தலைவர் ஹல்தர் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் அதிகாரிகள் கலந்துகொள்ள இருந்தனர். மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தமிழகத்தின் தேவைக்காக ஆண்டுதோறும் 177.2 டி.எம்.சி காவிரி நீரை வழங்க வேண்டுஎன்று கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி

மாதந்தோறும் தமிழகத்திற்க்கு வழங்க வேண்டிய நீரின் அளவை, காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி, தமிழகத்திற்க்கு ஜூன் மாதம் 9.19 டிஎம்சியும் ஜூலை மாதம் 31.24 டிஎம்சியும் காவிரி நீர் வழங்கப்பட வேண்டும் என மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.பிலிகுண்டுலு பகுதியில் உரிய நீர் வருவதை காவிரி மேலாண்மை ஆணையம் உறுதிப்படுத்த உத்தரவிடவேண்டும் எனவும் கூறியிருந்தார். உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி, ஜூன் மாதம் முதல் அக்டோபர் வரையிலான தென்மேற்கு பருவ காலத்தில் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நீர் குறித்து விவாதிக்கப்பட இருந்தது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் விரைவில் அணை கட்டப்படும் என்ற கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் அறிவிப்பு குறித்தும் இக்கூட்டத்தில் தமிழக பிரதிநிதிகள் கேள்வி எழுப்ப திட்டமிட்டிருந்தனர்.

நடப்பு மாதத்திற்கான ஒதுக்கீட்டில் இதுவரை ஒரு டிஎம்சி தண்ணீர் மட்டுமே தமிழகம் வந்துள்ள சூழலில்,மத்திய ஜல்சக்திதுறை தரப்பில் கடந்த 15ம் தேதி ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் காவிரி ஆணையத்தின் கூட்டமானது இடைக்கால தலைவர் ராஜேந்திர குமார் ஜெயின் தலைமையில் வரும் 22ம் தேதி நடைபெறும் என கூறப்பட்டது. இதில் மத்திய ஜல்சக்திதுறை செயலாளர், தமிழகம் உட்பட நான்கு மாநில உறுப்பினர்களும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும் இந்த கூட்டத்தின் போது இதுவரை காவிரி ஒழுங்காற்று குழுவில் ஆலோசிக்கப்பட்ட விவரங்கள், தாக்கல் செய்யப்பட்ட நீர் புள்ளிவிவரங்கள்,
அணை பாதுகாப்பு, காவிரியில் இருந்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி கர்நாடகா திறந்துவிட்ட நீரின் அளவு, ஆணையத்திற்கு என நிரந்தர தலைவர் ஆகியவை குறித்தும், முக்கியமாக காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படுவது குறித்தும் கண்டிப்பாக விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியது.
இந்த நிலையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் 22.06.2021 15ம் தேதி நடைபெற இருந்த நிலையில் திடீரென வரும் 25ம் தேதி அதாவது வெள்ளிகிழமை காலை 11 மணிக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான காரணங்கள் குறித்து ஆணைய வட்டாரங்கள் தரப்பில் கிடைத்த தகவலில், ‘தமிழகம் மற்றும் புதுவையில் புதியதாக ஆட்சி பொறுப்பில் அமைந்துள்ள அரசுகள் ஆணையத்தின் கூட்டத்தில் பங்கேற்கும் நிபுணர்கள், புதிய உறுப்பினர்கள் சிலரை நியமனம் செய்ய வாய்ப்புள்ளதால் தான், தற்போது கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனாவால் இறப்போரின் எண்ணிக்கை குறைத்துக் காட்டப்படுகிறதா?- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

 கரோனாவால் இறப்போரின் எண்ணிக்கை குறைத்துக் காட்டப்படுகிறதா?

15 Jun 2021

திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:


''தமிழ்நாட்டில் கருப்புப் பூஞ்சை நோயால் இதுவரை 1,736 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நமக்கு 45,000 எண்ணிக்கை அளவுக்கு ஆம்போடெரிசின் மருந்துகள் தேவை எனக் கேட்டுள்ளோம். இதுவரை மத்திய அரசிடம் இருந்து 11,796 ஆம்போடெரிசின் மருந்துகள் வரப்பெற்றுள்ளன. அவற்றில் நோயாளிகளுக்கு அளித்ததுபோக 4,366 கையிருப்பில் உள்ளன. கருப்புப் பூஞ்சை பாதிப்பால் இதுவரை 77 பேர் இறந்துள்ளனர்.

தமிழ்நாட்டுக்கு நேற்றுவரை 1.10 கோடி கரோனா தடுப்பூசிகள் வந்துள்ளன. அதில் 1.05 கோடி பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6.16 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. அவற்றையும் பிரித்துக் கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. தினமும் 2 லட்சம் என்ற அடிப்படையில் பிரித்துக் கொடுக்கப்பட்டாலும்கூட, இன்னும் 3 நாட்களுக்குத் தடுப்பூசி போதும். மத்திய அரசு ஜூன் மாதத்துக்குள் கொடுக்க வேண்டியதை அட்டவணைப்படுத்தி, அதற்கேற்பப் பிரித்துக் கொடுத்து வருகின்றனர். நாமும் அவற்றை மாவட்ட வாரியாக விநியோகித்து வருகிறோம். எனவே இனிமேல் தட்டுப்பாடு இருக்காது என நினைக்கிறேன்.

கரோனாவால் பாதிக்கப்பட்டு இறப்போரின் எண்ணிக்கையைக் குறைத்துச் சொல்ல வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. நானும், சுகாதாரத்துறைச் செயலாளரும் இதுவரை 23 மாவட்டங்களில் ஆய்வுக்கூட்டத்தை நடத்தியுள்ளோம். அப்போது கரோனா தொற்றால் ஏற்படும் ஒரு மரணத்தைக்கூட மறைக்கக் கூடாது என ஆட்சியர்களிடம் அறிவுறுத்தியுள்ளோம். கரோனாவால் பாதிக்கப்படுவோர் சிகிச்சையில் சேரும்போது பாசிட்டிவ் ஆக இருக்கும். 7 நாட்களில் அது, நெகட்டிவ் ஆக மாறிவிடும்.

சில நேரங்களில் தொற்றால் பாதிக்கப்படுவோர் 20 நாட்கள் ஆன நிலையில் நுரையீரல் பாதிப்புஇணை நோய்கள் காரணமாக இறக்கும்போது, அவருக்கு பாசிட்டிவ் ஆக இருக்காது. ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல்படி ஒருவர் மரணிக்கும் தறுவாயில், அதற்கு என்ன நோய் காரணமாக இருந்ததோ அதைத்தான் சான்றிதழில் குறிப்பிட முடியும். இந்த நடைமுறை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த முதல் அலையிலும்கூட இதைத்தான் கூறியுள்ளனர். உதாரணமாக பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மறைந்த எம்.பி. வசந்தகுமார் ஆகியோர் மருத்துவமனையில் சேரும்போது பாசிட்டிவ் ஆக இருந்தது. அவர்கள் இறந்தபோது நெகட்டிவ் எனக் காட்டியது. எனவே அவர்களுக்கு நெகட்டிவ் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கரோனாவால் பெற்றோரை இழந்து வாழும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அரசு உதவித்தொகை அறிவித்துள்ளதால், இச்சான்றிதழ் சிலருக்கு அவசியமானதாக விளங்குகிறது.

. கரோனா சிகிச்சைக்காக சித்தா, ஆயுர்வேதம் தொடர்புடைய 69 மருத்துவ சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு, இரண்டாம் அலையில் மட்டும் இதுவரை 22 ஆயிரம் பேர் குணமடைந்து, பயன்பெற்றுள்ளனர்''.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

பேட்டியின்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

 

 

யூனிபார்மை கழட்டிவிடுவேன்… போலீசை மிரட்டிய பெண் வழக்கறிஞர் தனுஜாராஜன் கைதாகிறார்?

 

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், மக்கள் தேவையின்றி வெளியில் வரவேண்டாம் என்று அறிவுறுத்தக்கட்டுள்ளது. அதையும் மீறி வெளியில் வரும் வாகனங்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். இது தொடர்பாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.   

இந்நிலையில், கடந்த சில  தினங்களுக்கு முன்பு சென்னை சேத்துபட்டு சிக்னலில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது,  அந்த வழியாக வந்த கார் ஒன்றை மறித்து விசாரணை செய்தார்கள். அப்போது அப்போது அந்த காரில் இருந்தவர்கள் ஒரிய போக்குவரத்து அனுமதி இல்லாமல், ஊரடங்கு உத்தரவையும் மீறி வெளியில் சுற்றி வருவது தெரியவந்த்து.  

இதனைத் தொடர்ந்து காரை ஓட்டி வந்த சட்டக்கல்லூரி மாணவி ப்ரீத்தி ராஜனுக்கு போலீசார் அபராதம் விதித்தார்கள். இது தொடர்பாக அந்த பெண் தனது அம்மாவிற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து உடனடியாக சொகுசு காரில் அந்த இடத்திற்கு வந்த அவரது தாயார் தனுஜா ராஜன், காவல்துறையினருடன்  கடுமையானவாக்குவாத்த்தில்ஈடுபட்டார். மேலும் காவல்துறையினரை தரக்குறைவாக பேசிய அவர்,  யூனிபார்மை கழட்டி விடுவேன் என்று என்று ஒருமையில் பேசியுள்ளார்.



இது தொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை தொடர்ந்து தாய், மகள் இருவர் மீதும், 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து தாய் மகள் இருவரும் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், இருவரும் முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இன்று நடைபெற்ற இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையில்,  போலீஸார் பேசிய மோசமான வார்த்தைகள் எடிட் செய்யப்பட்டு, தனுஜா பேசியது மட்டும் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டிருக்கிறது.

மனுதாரர் உணர்ச்சி வசப்பட்டே அவ்வாறு நடந்துள்ளார். எனவே அவர்களுக்கு முன்ஜாமீன் அளிக்க வேண்டும், என வாதிடப்பட்டது. ஆனால் காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்ததுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளதால் முன் ஜாமீன் வழங்கக்கூடாது என காவல்துறை சார்பில் கூறப்பட்டது. வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த சம்பவத்தில், சம்பவத்தில் முன்ஜாமீன் வழங்கினால் தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும் என்று கூறி முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

 

 

 

 

 

கோயில் சொத்து ஆவண விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம்

 


தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களின் நில உரிமை ஆவணங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் 4,78,272 ஏக்கர் ஆகும். முதற்கட்டமாக 3,43,647 ஏக்கர் நிலம் தொடர்பான விவரங்களை அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், இந்து சமய அறநிலையத்துறையின் கீழுள்ள கோயில்களின் 70% கோயில்களின் சொத்துகள் இதில் அடங்கும். தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களின் நில உரிமை ஆவணங்களைச் சரிபார்க்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

திருக்கோயில் நிலங்களின் உரிமை ஆவணங்கள் வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள “தமிழ்நிலம்” மென்பொருளோடு ஒப்பீடு செய்யப்பட்டு முழுவதும் ஒத்துப்போகும் இனங்கள், பகுதியாக ஒத்துப்போகும் இனங்கள் மற்றும் புதிய இனங்கள் என மூன்று இனங்களாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன. கோயில்களுக்கு சொந்தமான அனைத்து நிலங்களின் தலைப்பு பத்திரங்களும் சம்பந்தப்பட்ட கோயில்களின் பெயரில் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.



முதற்கட்டமாக வெளியிடப்பட்ட 3 லட்சத்து 43 ஆயிரத்து 647 ஏக்கர் நிலங்கள் முழுவதும் ஒத்துப்போகும் இனங்களாக கண்டறியப்பட்டு அந்நிலங்களின் ‘அ’ பதிவேடு நகர நில அளவை பதிவேடு சிட்டா போன்றவை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் http://www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டன.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்குவது கடந்த மாதம் தொடங்கியது. அரசின் கட்டுப்பாட்டில் இந்து கோயில்கள் இருப்பதால் அவை முறையான பராமரிப்பின்றி இருப்பதாக கூறி பாஜக, ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஆன்மிக குரு ஜக்கி வாசுதேவ் உள்ளிட்டோர் இந்து கோயில்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்த நிலையில், கோவில் சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களை இணையத்தில் பதிவேற்றி பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்ற முடிவை புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு எடுத்தது.

 

 

ஹெச்.ராஜாவை கண்டித்து சிவகங்கை பா.ஜ.க. நிர்வாகிகள் ராஜினாமா

 

அக்கட்சியின் சிவகங்கை மாவட்டத் தலைவர், தேவகோட்டை, காரைக்குடி நக ரத் தலைவர்கள் உட்பட பலர் ராஜி னாமா கடிதம் கொடுத்துள்ளனர்.

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா 2019-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்திடம் தோல்வி அடைந்தார். சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காரைக்குடி தொகுதியில் தோல்வி அடைந்தார். இந்நிலையில் தனது தோல்விக்குக் கட்சி நிர்வாகிகள் சிலர்தான் காரணம் என ஹெச்.ராஜா கூறியதாகக் கூறப்படு கிறது. இதையடுத்து காரைக்குடி நகரத் தலைவர் சந்திரன், சாக்கோட்டை தெற்கு ஒன்றியத் தலைவர் பாலா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் மாவட்டத் தலைவர் செல் வராஜிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர். இந்நிலையில் திடீரென பாஜக மாவட்டத் தலைவர் செல்வராஜூம் மாநிலத் தலைமைக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளார்.

காரைக்குடி நகரத் தலைவர் சந்திரன் கடிதத்தில் கூறியதாவது: ஹெச்.ராஜா தனது தோல்விக்கு என்ன காரணம் என்பதை ஆராயாமலும், சுயபரிசோதனை செய்து கொள்ளாமலும், தான் செய்த தவறை மறைப்பதற்காக எங்கள் மீது குற்றம் சாட்டுகிறார்,’’ எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாஜக மாவட்டத் தலைவர் செல்வராஜ் கூறுகையில், ‘‘நான் ராஜினாமா செய்தது உண்மைதான். இன்னும் ஓரிரு நாட்களில் செய்தியாளர்களை சந்தித்து உண்மையைக் கூறுகிறேன். தேவகோட்டை, காரைக்குடி நகர நிர்வாகிகள், கண்ணங்குடி, சாக்கோட்டை ஒன்றிய நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளனர். இன்னும் பலர் தொடர்ந்து ராஜினாமா கடிதம் கொடுத்து வருகின்றனர்,’’ என்றார்.

பா.ஜ.க காரைக்குடி நகரத் தலைவர் சந்திரன், பா.ஜ.க சிவகங்கை மாவட்டத் தலைவர் செல்வராஜிடம் அளித்துள்ள கடிதத்தில், “எச்.ராஜா தனது தோல்விக்கு என்ன காரணம் என்பதை ஆராயாமலும், சுயபரிசோதனை செய்து கொள்ளாமலும், தான் செய்த தவறை மறைப்பதற்காக எங்கள் மீது குற்றம் சாட்டுகிறார்.

மேலும், மாவட்ட துணை தலைவர் எஸ்.வி.நாராயணன் மூலமாக எனக்கு பல்வேறு வகையில் தொல்லை கொடுத்து வந்தார். எச்.ராஜா மற்றும் அவரது மருமகன் சூர்யா

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வைக் கண்டித்து 


 ஆகியோர் என்னை பல்வேறு நபர்கள் மூலமாக தொடர்ந்து மிரட்டி வந்தார். இதனால் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் ஆபத்து நிகழும் என அஞ்சுகிறேன்.

மேலும் பதவியில் நான் தொடர்ந்து நீடித்தால் என்னை கொலை செய்யக்கூட அஞ்சமாட்டார்கள் என அஞ்சி எனது காரைக்குடி நகரத் தலைவர் பொறுப்பிலிருந்து என்னை விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

எனக்கோ, எனது குடும்பத்தாருக்கோ, என்னுடன் இணைந்து பணியாற்றிய கட்சி நிர்வாகிகளின் உயிருக்கோ உடைமைக்கோ ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு எச்.ராஜா உள்ளிட்டவர்களே பொறுப்பாவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.