சென்னை, ஜூன் 30–
சென்னையில் நேற்று தொடங்கப்பட்ட மெட்ரோ ரெயில் பயணம் பொது மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது. பாதுகாப்பு கருதி பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன் விவரம் வருமாறு:–
* குடித்து விட்டு, பயணிகளுக்கு இடையூறு – ரூ.500 அபராதம்.
* பிறருக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் எடுத்து சென்றால் – ரூ.500 அபராதம்.
* அபாயகரமான பொருட்கள் எடுத்து சென்றால் – ரூ.5,000 அபராதம் மற்றும் நான்கு ஆண்டுகள் சிறை.
* ரெயிலில், எழுதுவது, போஸ்டர் ஒட்டினால் – 6 மாதங்கள் தண்டனை அல்லது 1,000 ரூபாய் அபராதம்.
* ரெயிலில் கூரையில் பயணம் செய்தால் – ஒரு மாதம் தண்டனை அல்லது ரூ.50 அபராதம்.
* சட்டத்திற்கு புறம்பாக ரெயிலில் நுழைந்தால் – 3 மாதங்கள் தண்டனை அல்லது ரூ.250 அபராதம்.
* சட்டத்திற்கு புறம்பாக ரெயில் தண்டவாளத்தில் நடந்தால் – 6 மாதங்கள் சிறை அல்லது ரூ.500 அபராதம்.
* ரெயில் இயக்கத்திற்கு தடை ஏற்படுத்தினால் – 4 ஆண்டுகள் தண்டனை அல்லது ரூ.5,000 அபராதம்.
* முறையான பயண சீட்டு இல்லாமல் பயணித்தால் – பயண தொகையுடன், ரூ.50 அபராதம்.
* அவசர அழைப்பு மணியை தவறாக பயன்படுத்தினால் – ஒரு ஆண்டு தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம்.
* அத்துமீறி பொருட்கள் விற்பனை – 6 மாதங்கள் தண்டனை அல்லது ரூ.500 அபராதம்.
* போலி பயண சீட்டு விற்பனை – 3 மாதங்கள் தண்டனை அல்லது ரூ.500 அபராதம்.
* மெட்ரோ ரெயில் பொருட்களை சேதப்படுத்தினால் – 10 ஆண்டு சிறை தண்டனை.
* தவறான தகவல் மூலம் இழப்பீடு கேட்பது – 3 ஆண்டுகள் சிறை தண்டனை.
* நாசவேலையில் ஈடுபட்டால் – ஆயுள் தண்டனை, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்
No comments:
Post a Comment