ஆலந்தூரில் இருந்து புறப்பட்ட முதல் மெட்ரோ ரெயிலை இயக்கிய சென்னை பெண் பிரீத்தி
சென்னை, ஜூன் 29-
சென்னையில் ரூ.14 ஆயிரத்து 600 கோடி செலவில் நடந்து வரும் மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளில் முதல் கட்டமாக கோயம்பேடு–ஆலந்தூர் இடையிலான மெட்ரோ ரெயில் சேவையை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, சரியாக பகல் 12.16 மணிக்கு ஆலந்தூரில் இருந்து கோயம்பேடு நோக்கி புறப்பட்ட முதல் மெட்ரோ ரெயிலை சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த பிரீத்தி என்பவர் ஓட்டி சாதனை படைத்துள்ளார்.
மெட்ரோ ரெயில் திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியானவுடன் ஏற்கனவே செய்துவந்த பணியை ராஜினாமா செய்துவிட்டு மெட்ரோ ரெயிலை இயக்குவதற்கான ஓட்டுனர் வேலைக்கு இவர் மனு செய்தார். அதிர்ஷ்டவசமாக இந்த பணிக்கான ஒரே பெண்ணாக பிரீத்தி தேர்வானார்.
பின்னர், இதற்கான தனிப் பயிற்சிகளை நிறைவு செய்து, சென்னையின் முதல் மெட்ரோ ரெயிலை இயக்கியவர் என்ற சிறப்பிடத்தை இவர் பிடித்துள்ளார். சென்னை தரமணியில் உள்ள தர்மாம்பாள் பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளோமா பட்டம் பெற்றவர் பிரீத்தி, என்பது குறிப்படத்தக்கது.
No comments:
Post a Comment