சென்னை, ஜூன் 28-
சென்னை அரசு பொது மருத்துவமனை அருகே நடந்த மெட்ரோ ரெயில் பணியின்போது ஏற்கனவே ஏற்பட்ட பள்ளத்தில் இருந்து நேற்று ரசாயன கலவை கொப்பளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மீண்டும் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
சென்னையில் மெட்ரோ ரெயில் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை எதிரே உள்ள பூந்தமல்லி சாலையில் நேற்று முன்தினம் பிற்பகல் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதில் அந்த வழியாக வந்த கார் ஒன்று பள்ளத்தில் சிக்கிக்கொண்டது.
நல்லவேளையாக கார் மெதுவாக வந்ததால் அதில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இந்த சம்பவத்தால் அந்த சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்த பள்ளத்தில் மெட்ரோ ரெயில் ஊழியர்கள் அவசரமாக கலவை மற்றும் மணல் கொட்டியும், ராட்சத இரும்பு தகடுகள் பொருத்தியும் சரிசெய்தனர். இதனால் அங்கு போக்குவரத்து சீரானது.
இந்தநிலையில், நேற்று பிற்பகலில் அதே இடத்தில் இரும்பு தகடு பொருத்தப்பட்ட பகுதியில் இருந்து ரசாயன கலவை கொப்பளித்து வெளியே வந்தது. சில நிமிடங்களில் சாலை முழுவதும் ரசாயன கலவை தேங்கியது. தொடர்ந்து ரசாயன கலவை வெளியேறிக் கொண்டு இருந்ததால் அந்த வழியாக சென்றவர்கள், அங்கிருந்த கடைக்காரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் நேற்று பிற்பகலில் மீண்டும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்த மெட்ரோ ரெயில் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். பாதுகாப்பு கருதி போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டனர்.
பின்னர் மெட்ரோ ரெயில் ஊழியர்கள் சாலையில் தேங்கி வழிந்தோடிய ரசாயன கலவையை அப்புறப்படுத்தினர். பின்னர் அந்த இடத்தை சுற்றிலும் சிமெண்ட் மூட்டைகளை அடுக்கி, எஞ்சிய பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதித்தனர். தொடர்ந்து ரசாயன கலவையை அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதன் காரணமாக சென்டிரலில் இருந்து பாரிமுனை செல்வதற்கு 20 நிமிடங்களுக்கு மேல் ஆனது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்த பள்ளத்தை நிரந்தமாக சீரமைக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறுகையில், ‘‘நகரின் முக்கியமான பகுதி என்பதாலும், அரசு மருத்துவமனை அருகில் உள்ளதாலும் தற்காலிக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு போக்குவரத்து சரிசெய்யப்பட்டுள்ளது. ஆனால் இரவோடு இரவாக இந்த பள்ளம் சரிசெய்யப்பட்டு, போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.
சென்னை அரசு பொது மருத்துவமனை அருகே நடந்த மெட்ரோ ரெயில் பணியின்போது ஏற்கனவே ஏற்பட்ட பள்ளத்தில் இருந்து நேற்று ரசாயன கலவை கொப்பளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மீண்டும் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
சென்னையில் மெட்ரோ ரெயில் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை எதிரே உள்ள பூந்தமல்லி சாலையில் நேற்று முன்தினம் பிற்பகல் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதில் அந்த வழியாக வந்த கார் ஒன்று பள்ளத்தில் சிக்கிக்கொண்டது.
நல்லவேளையாக கார் மெதுவாக வந்ததால் அதில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இந்த சம்பவத்தால் அந்த சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்த பள்ளத்தில் மெட்ரோ ரெயில் ஊழியர்கள் அவசரமாக கலவை மற்றும் மணல் கொட்டியும், ராட்சத இரும்பு தகடுகள் பொருத்தியும் சரிசெய்தனர். இதனால் அங்கு போக்குவரத்து சீரானது.
இந்தநிலையில், நேற்று பிற்பகலில் அதே இடத்தில் இரும்பு தகடு பொருத்தப்பட்ட பகுதியில் இருந்து ரசாயன கலவை கொப்பளித்து வெளியே வந்தது. சில நிமிடங்களில் சாலை முழுவதும் ரசாயன கலவை தேங்கியது. தொடர்ந்து ரசாயன கலவை வெளியேறிக் கொண்டு இருந்ததால் அந்த வழியாக சென்றவர்கள், அங்கிருந்த கடைக்காரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் நேற்று பிற்பகலில் மீண்டும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்த மெட்ரோ ரெயில் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். பாதுகாப்பு கருதி போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டனர்.
பின்னர் மெட்ரோ ரெயில் ஊழியர்கள் சாலையில் தேங்கி வழிந்தோடிய ரசாயன கலவையை அப்புறப்படுத்தினர். பின்னர் அந்த இடத்தை சுற்றிலும் சிமெண்ட் மூட்டைகளை அடுக்கி, எஞ்சிய பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதித்தனர். தொடர்ந்து ரசாயன கலவையை அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதன் காரணமாக சென்டிரலில் இருந்து பாரிமுனை செல்வதற்கு 20 நிமிடங்களுக்கு மேல் ஆனது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்த பள்ளத்தை நிரந்தமாக சீரமைக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறுகையில், ‘‘நகரின் முக்கியமான பகுதி என்பதாலும், அரசு மருத்துவமனை அருகில் உள்ளதாலும் தற்காலிக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு போக்குவரத்து சரிசெய்யப்பட்டுள்ளது. ஆனால் இரவோடு இரவாக இந்த பள்ளம் சரிசெய்யப்பட்டு, போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.
No comments:
Post a Comment