Wednesday, 1 July 2015

ஹெல்மெட் அணியாத போலீசாரை மடக்கி பிடித்த எஸ்.பி.: 670 பேர் மீது வழக்கு

நாகர்கோவில், ஜூலை. 1–ஹெல்மெட் அணியாத போலீசாரை மடக்கி பிடித்த எஸ்.பி.: 670 பேர் மீது வழக்கு
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் அருகே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் நேரடியாக ஹெல்மெட் சோதனையில் ஈடுபட்டார். டி.எஸ்.பி. ஈஸ்வரன் மற்றும் போலீசாரும் இதில் பங்கேற்றனர்.
அப்போது அந்த வழியாக ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை போலீசார் மடக்கி பிடித்து ரூ.100 அபராதம் விதித்தனர். மேலும் அவர்களது வாகனம் மற்றும் லைசென்சுகளை பறிமுதல் செய்தனர்.
ஹெல்மெட் வாங்கி வந்து அதனை காண்பித்த பிறகுதான் வாகனத்தையும் ஆவணங்களையும் ஒப்படைத்தனர். போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் சோதனை செய்துகொண்டிருந்தபோது ஒரு போலீஸ்காரர் ஹெல்மெட் அணியாமல் வாகனத்தில் வந்தார். அவரை எஸ்.பி. மடக்கி பிடித்தார். அவரது வாகனத்தை பறிமுதல் செய்து அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இதுபோல நாகர்கோவில் சப்–டிவிசனில் 170 பேரும், கன்னியாகுமரி சப்–டிவிசனில் 94 பேரும், தக்கலை சப்–டிவிசனில் 330 பேரும், குளச்சல் சப்–டிவிசனில் 76 பேரும் என மொத்தம் 670 பேர் மீது ஹெல்மெட் அணியாதது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் அனைத்து இடங்களிலும் இந்த சோதனை முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.
இதுபற்றி போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கூறியதாவது:–
குமரி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 50 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. 99 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் ஹெல்மெட் அணிந்து இருந்தனர். போலீசார் ஏற்கனவே ஏற்படுத்தி இருந்த விழிப்புணர்வு காரணமாக பெரும்பாலானவர்கள் ஹெல்மெட்டுடன்தான் வாகனம் ஓட்டினார்கள். ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு அவர்களது வாகனமும், ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment