Wednesday, 1 July 2015

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து புதுக்கோட்டையில் விவசாயிகள் சங்கம் போராட்டம்

புதுக்கோட்டை, ஜூலை.1–
பிரமதர் மோடி தலைமையிலான மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவைக் கண்டித்தும், மசோதாவைத் திரும்பப்பெற வலியுறுத்தியும் நாடு முழுவதும் அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் விவசாயிகளின் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
அதனொரு பகுதியாக புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.செபஸ்தியான் தலைமை வகித்தார். புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற விவசாயிகளின் பேரணியை அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.லாசர் எம்எல்ஏ., தொடங்கி வைத்து உரையாற்றினார்.
கோரிக்கைகளை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை, மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ராஜசேகரன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பொன்னுச்சாமி மற்றும் நிர்வாகிகள் எம்.முத்துராமலிங்கன், கே.ஆர்.சின்னையா, சா.தோ.அருனோதயன், பி.ராமசாமி, தென்றல் கருப்பையா உள்ளிட்ட 600–க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் தொடங்கிய பேரணி அண்ணா சிலை, தெற்கு நான்காம் வீதி உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. பேரணி முடிவில் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது

No comments:

Post a Comment