வாழப்பாடி, ஜூன் 30–
சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், வாழப்பாடி பகுதியில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை தடுப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டு வருகிறது.
வாழப்பாடி அடுத்த துக்கியாம் பாளையம் ஊராட்சி மாரியம்மன் புதூர் கிராமத்தில் நடந்த கருத்தரங்கிற்கு, யூனியன் கவுன்சிலர், வனக்குழு தலைவர் முருகன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் பாலாஜி வர வேற்றார்.
சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலர் தேவகி, வாழப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர், தலைமையாசிரியர்கள் பூங்கொடி, ஞானசேகரன், கிராம நிர்வாக அதிகாரி புஷ்பா, புதுவாழ்வு திட்ட அணித் தலைவர் ஜெயக்குமார், போலீஸ் உதவி ஆய்வாளர்கள் கிருஷ்ணன், உதயக்குமார் ஆகியோர், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கருத்துரை வழங்கினர்.
கருத்தரங்கின் முடிவில், மகளிர் கூட்டமைப்பு தலைவி தீபா நன்றி கூறினார்
No comments:
Post a Comment