ஒரத்தநாடு, ஜூலை 1–
தஞ்சை அருகே உள்ள சின்ன பொன்னாப்பூர் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். பட்டுக்கோட்டை அரசு போக்குவரத்து கழக டிப்போவில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மகள் சந்தியா(12). இவள் பனையகோட்டையில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து வந்தாள். இன்று காலை தனது அக்கா சவுந்தர்யாவுடன் சைக்கிளில் பள்ளிக்கு சென்றார்.
அப்போது மன்னார்குடியில் இருந்து தஞ்சைக்கு வந்த அரசு பேருந்து மாணவி சைக்கிளில் தொங்கவிட்டிருந்த பை மீது உரசியது. இதனால் நிலை தடுமாறிய மாணவி சந்தியா பேருந்துக்குள் விழுந்தார். அவர் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது அக்கா காயம் இன்றி உயிர் தப்பினார்.
விபத்து குறித்த தகவல் கிடைத்தும் சந்தியாவின் உறவினர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் சிறிது நேரம் மறியலில் ஈடுபட்டனர். தகவல் கிடைத்ததும் ஒரத்தநாடு டி.எஸ்.பி. செங்கமலக்கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அவர்கள் பலியான மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து ஒரத்தநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இன்று காலை பேருந்து மோதி மாணவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment